Your cart is empty.


மஞ்சு
“எம்.டி. வாசுதேவன் நாயரின் இந்த நாவல் காத்திருப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன. கோடை நாட்கள் குளிர் பருவம் வரக் காத்திருக்கின்றன. தன்னைத் … மேலும்
“எம்.டி. வாசுதேவன் நாயரின் இந்த நாவல் காத்திருப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன. கோடை நாட்கள் குளிர் பருவம் வரக் காத்திருக்கின்றன. தன்னைத் தேடிவரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு மலைப்பிரதேசம் காத்திருக்கிறது. ஒருபோதும் பார்த்திராத பளிங்குக்கண் தகப்பனுக்காக ஒரு சிறுவன் காத்திருக்கிறான். ஒருகாலத்தில் பார்த்துக் களித்த நீல நரம்புகள் துடிக்கும் முகத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள். ஒருமுறைகூடப் பார்த்துவிட முடியாத மரணத்துக்காக ஒரு மனிதன் காத்திருக்கிறான். காத்திருப்பின் தனிமையும் எதிர்பார்ப்பின் துயரமும் மூடுபனியாக அந்த மனிதர்களை, இடத்தை, காலத்தை மூடுகிறது. அந்த உறைபனிக்குள் உணர்வுகள் உருகிச் சொற்களாக உருமாறி மௌனத்தின் இசையுடன் பெருகுகின்றன. கதையின் ஓட்டம் வாசிப்பவர்களின் மனவெளியில் மஞ்சுப் படலமாகப் படர்கிறது.”
எம்.டி. வாசுதேவன் நாயர்
எம்.டி. வாசுதேவன் நாயர் (பி. 1933) எம்.டி. என்று கேரள சமூகம் நேசத்துடன் அழைக்கும் மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர், அன்றைய மலபார் மாவட்டம் பொன்னானி வட்டத்தைத் சேர்ந்த கூடலூர் கிராமத்தில் பிறந்தார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் வேதியியல் பயின்று பட்டம் பெற்றார். ‘மாத்ருபூமி’ இதழின் துணையாசிரியராகவும் பின்னர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் எனப் பல துறைகளிலும் இயங்கிப் புகழ்பெற்றவர். நாவல்கள் (9), சிறுகதைகள் (16 தொகுப்புகள்), நாடகம் (1), சிறார் இலக்கியம் (2), பயணக் கதை (1), நினைவுக் குறிப்புகள் (2), இலக்கிய, பண்பாட்டுக் கட்டுரைகள் (5) ஆகிய இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்துள்ளவர். கேரள சாகித்திய அக்காதெமி, சாகித்திய அக்காதெமி, ஞானபீடம் போன்ற அமைப்புகளின் உயர்ந்த விருதுகள் உட்பட 25க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். 2005இல் இந்திய அரசின் பத்மபூஷண் விருது எம்.டி.க்கு அளிக்கப்பட்டது. எம்.டி. அவரே இயக்கிய எட்டுப் படங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். சிறந்த திரைப்பட இயக்குநராக மூன்று முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றதுடன் கதை, திரைக்கதைக்காகவும் இருபது முறை விருதுகள் பெற்றிருக்கிறார். ஏழு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். திரைத்துறைச் சாதனையாளர்களுக்கான கேரள மாநில அரசின் உயர்ந்த விருதான ஜே.சி. டானியல் விருது இவருக்கு 2013இல் வழங்கப்பட்டது. தற்போது கோழிக்கோட்டில் வசிக்கிறார்.
ISBN : 9789352441044
SIZE : 13.8 X 0.4 X 21.4 cm
WEIGHT : 132.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
சிறகு முளைத்த பெண்
சமூகம், மதம், அரசியல், நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எ மேலும்
எழுதித் தீராப் பக்கங்கள்
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும்
நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்
அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நட மேலும்
கலாச்சாரக் கவனிப்புகள்
யாழ்ப்பாணக் கச்சேரியடியில் ‘இவ்விடத்தில் துப்பாதீர்கள்’ என்று அறிவிப்பு எழுதிவைத்தால் ‘எந்த மானமு மேலும்
சமூகவியலும் இலக்கியமும்
பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் மேலும்
சில ஆசிரியர்கள் சில நூல்கள்
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும்
படைப்புக்கலை
அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல். உணர்ச்சிகளை அதிகம மேலும்
மெட்ராஸ் 1726
காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும்
இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும்
தருநிழல்
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிர மேலும்
ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி
இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம். சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம். பெர மேலும்
யாத்திரை
கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்ட மேலும்