Your cart is empty.


ரெமோன் எனும் தேவதை
மனித உடல் என்பது அரசியல் களம். மனித உடல் சார்ந்த உறவுகள் பெரும் அரசியல் தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ் -இன் சிறுகதைகள் ஓரினப் பாலுணர்வு, உடை மாற்றி … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | சிறுகதைகள் |
மனித உடல் என்பது அரசியல் களம். மனித உடல் சார்ந்த உறவுகள் பெரும் அரசியல் தந்திரங்கள். சித்துராஜ் பொன்ராஜ் -இன் சிறுகதைகள் ஓரினப் பாலுணர்வு, உடை மாற்றி அணிந்து கொள்ளும் பழக்கம், வர்த்தக உடல் உறவு, மனிதர்கள் மீது ஒருவருக்கு ஒருவர் நடத்திக் காட்டும் உடல் மற்றும் மன ரீதியிலான வன்முறைகள் என்று பல்வேறு தளங்களைக் கடந்து பயணிக்கின்றன. மனித உடல் என்பது ஒரு சதுப்பு நிலம். அதில் மிருகங்களும் திடகாத்திரமான பூதங்களும் தேவதைகளைப் போல் உருவம் மாற்றிக் கொண்டு அலைகின்றன. தேவதைகள் சடசடக்கும் இறக்கைகள் சகிதமாக நரபட்சிணிகள். ‘ரெமோன் எனும் தேவதை’ சித்துராஜ் பொன்ராஜ் -இன் இரண்டாவது தமிழ்ச் சிறுகதை தொகுப்பு.
சித்துராஜ் பொன்ராஜ்
சித்துராஜ் பொன்ராஜ் (பி. 1973) சித்துராஜ் பொன்ராஜ் (Sithuraj Ponraj) தமிழ், ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளில் கதை, கவிதை எழுதி வருகிறார். அவருடைய முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பான ‘மாறிலிகள்’ தமிழ்ப் புனைவுப் பிரிவில் 2016ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசையும் அவருடைய முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி ‘காற்றாய் கடந்தாய்’ அதே ஆண்டு சிங்கப்பூர் இலக்கிய தமிழ்க் கவிதைப் பிரிவில் தகுதிப் பரிசையும் வென்றன. தமிழில் ‘பெர்னுலியின் பேய்கள்’ என்ற நாவலையும் இரண்டு சிறுவர் நாவல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் இவரது முதல் கவிதைத் தொகுதியான ‘The Flag Party’ 2017ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்தது. இவருடைய ஸ்பானியக் குறுங்கதைத் தொகுப்பு 2018 ஜனவரியில் வெளிவரவிருக்கிறது. மின்னஞ்சல்: sithurajponraj134@gmail.com
ISBN : 9789386820846
SIZE : 13.7 X 0.7 X 21.5 cm
WEIGHT : 201.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஒளிரும் பச்சைக் கண்கள்
சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்ரம மேலும்
தலைப்பில்லாதவை
யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான 'மணற்கேணி' 2008இல் வெளிவந்தது. ஜனரஞ்சக இதழ்களில் பக்க ந மேலும்
ஆகாயத் தாமரை
ரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ‘ஆகாயத் தாமரை‘யாக விரி மேலும்
பள்ளியில் ஒரு நாய்க்குட்டி
சுந்தர ராமசாமி, தனது நாட்குறிப்பேட்டில் தன் கைப்பட எழுதி வைத்திருந்த, முழுமைபெற்ற, பெறாத சிறுகதைக மேலும்
இல்லாத ஒன்று
எளிமையான கதைகளில் பல, எளிமையான தோற்றம் கொண்டவையே தவிர உண்மையில் எளிமையானவை அல்ல. 1951 முதல் 1966 மேலும்
அழைப்பு
தனிப்பட்ட சில காரணங்களுக்காக 1970 முதல் 1977 வரை சுந்தர ராமசாமி எதுவும் எழுதாமல் இருந்திருக்கிறார மேலும்
வனம் திரும்புதல்
புலம்பெயர் தேசங்களில் அலையும் மனிதர்களையும் பொருளாதார, சமூக பாதுகாப்பைக் கோரி நிற்கிற கதாபாத்திரங மேலும்
ஒளிவிலகல்
தமிழின் முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எம். யுவனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்திய மரபிலிர மேலும்
என் வீட்டின் வரைபடம்
மொழியைச் சோதித்துக் கொண்டிருக்கும் புதுவகை எழுத்துகளில் காணக்கிடைக்காத நேசத்தை, தன்னெழுச்சியை, மேலும்
கனவுப் புத்தகம்
தீவிரமான பாலியல் பிரக்ஞை கொண்ட பெண், ஆண்மை உணர்வு அவமானப்படுத்தப்படுவதன் விளைவாகக் கொலைவெறிகொள மேலும்
பிறகொரு இரவு
தேவிபாரதியின் இந்த நான்கு கதைகளையும் வாசிக்கையில் எனக்கு வசப்பட்ட கருத்து இலக்கியப் புனைவில் அவரு மேலும்
முதல் தனிமை
தமிழுக்குப் புதிய கதைக் களங்களையும் கதை மாந்தர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கும் ஜே.பி.சாணக்யா, வ மேலும்