Your cart is empty.


வெயில் நீர்
இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ளடக்கியது. தொகுப்பில் உருப்பெறும் மையக் கதாபாத்திரங்கள் பொ. கருணாகரமூர்த்தியின் மென்மையும் அங்கதமுமான எழுத்தில் தனித்தன்மை கொண்டோராகின்றனர். … மேலும்
இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ளடக்கியது. தொகுப்பில் உருப்பெறும் மையக் கதாபாத்திரங்கள் பொ. கருணாகரமூர்த்தியின் மென்மையும் அங்கதமுமான எழுத்தில் தனித்தன்மை கொண்டோராகின்றனர். அவர்கள் தோற்றத்திலும் குணநலன்களிலும் மாறுபட்டவர்கள். அரசியல் - சமூக ஒழுங்குகளிலிருந்து தனிமைப்பட்டும் முரண்பட்டும் விலகியவர்கள்.
காசி, ஜெனிபர், நீலக்கண்களைக் கொண்ட பாலசிங்கம் என்று கதைகளில் திரண்டு நிற்கும் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக்குவது இந்தத் தனித்தன்மையான குணநலன்களும் மாறுபாடுகளும்தான். வெகுஜனப் போக்குகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் ஒழுங்குகளுக்கும் அதிர்ச்சியை அளிக்கின்றவர்களாக எழுத்தில் அக்கதாபாத்திரங்கள் உருப்பெறுகின்றனர். வெவ்வேறு நிலப்பகுதிகளைக் கண்டடைந்து புனைவுமொழியில் அமரத்துவமான சாத்தியங்களை உருவாக்கிக் காண்பிக்கிறார் பொ. கருணாகரமூர்த்தி.
தனித்துவமான மனிதர்களின் வாழ்வில் அரசியல் பண்பாட்டு விழுமியங்கள் நிகழ்த்தும் அழுத்தங்களும் அதிலிருந்து துண்டுபட்டு விடுபடும் தருணங்களும் எனச் சிலநேர ஆசுவாசங்களைக் கையளிக்கிறது பொ.க.வின் கதை உலகம். இக்கதைகள் கொடுப்புக்குள் நகைப்பை உண்டாக்கினாலும் அவை தரும் அதிர்வுகள் எளிதில் வெளிவரமுடியாத உணர்வைத் தருகின்றன.
ISBN : 9789391093273
SIZE : 14.2 X 1.0 X 21.6 cm
WEIGHT : 232.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
காலத்தை இசைத்த கலைஞன்
-இளையராஜாவிடமிருந்து பீறிடும் இசை வெள்ளம் விளக்க முடியாத ஒரு புதிர். இன்று தமிழகத்தில் வாழ்ந்துகொ மேலும்
ஆத்மாநாம் தேர்ந்தெடுத்த கவிதைகள்
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்ப மேலும்
சண்டைக்காரிகள்: ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள்
பெண்களைச் சுற்றிப் புனித பிம்பத்தை எழுப்பி அவர்களை மலருக்கு ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கும் பொதுச் மேலும்
கடவுளுக்கு வேலை செய்பவர்
இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உ மேலும்
கலைவெளிப் பயணி சிற்பி தனபால்
நுண்கலைத் துறையில் சென்னைப் பாணியை உருவாக்கியவர்களில் ஒருவர் சிற்பி தனபால். படைப்பாற்றல் மிக்க சி மேலும்
சேத்துமான் கதைகள்
தென் தமிழகத்தில் புழங்கும் சாதியின் தீவிரம் அதற்கு வெளியிலிருப்பவர்களுக்கு எல்லா விதங்களிலும் உணர மேலும்
மரங்கள் பேசும் மௌன மொழி
மரங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது இந்தப் புத்தகத்தைப் படி மேலும்
யானைகளும் அரசர்களும்: சுற்றுச்சூழல் வரலாறு
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது.
காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற் மேலும்
பாயசம்
சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிராமன். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நின மேலும்
தமிழ் வேளாண் கலைச்சொற்களின் வட்டார வேறுபாட்டு அகராதி
- பொருள் உணர்வோடும் வட்டார வழக்கு ஒப்பீட்டோடும் உருவாக்கப்பட்ட முதல் வேளாண் கலைச்சொல் அகராதி மேலும்
மண் அளக்கும் சொல்
இந்நூல் தாவரங்களைப் பேசும் கட்டுரை நூல் என்று லௌகீக நிர்ப்பந்தங்களுக்காகப் புத்தக விவரத்தில் தரப் மேலும்