Your cart is empty.


தனது கவிதைகளெல்லாம் ஓவியங்களோடு வெளிவர வேண்டும் என்பது மகாகவி பாரதியின் கனவு. வாழ்ந்த காலத்தில் அக்கனவு மெய்ப்படவில்லை. மறைவுக்குப் பிந்தைய காலத்தில் தமிழின் முதல் நாளிதழான 'சுதேசமித்திரன்' 1934-1937 காலப்பரப்பில் பாரதியின் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகளை ஓவியங்களோடு பெரிய அளவில் தொடர்ந்து வெளியிட்டது. இந்த ஓவியங்களை வரைந்தவர் 'மணிக்கொடி' இதழின் முதல் வெளியீட்டிலேயே கருத்துப்படம் வரைந்த பெருமைக்குரிய கே.ஆர். சர்மா. 'காந்தி' இதழில் இவர் வரைந்த கருத்துப்படங்கள் இங்கிலாந்திலிருந்து வெளிவந்த பத்திரிகையில் மறுவெளியீடு பெற்ற பெருமைக்குரியவை. இவர் வரைந்த ஓவியங்கள் பாரதிதாசனின் 'ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி கவிதாமண்டல'த்தையும் அணிசெய்த சிறப்புக்குரியவை.
'சுதேசமித்திர'னில் தொடர்ந்து பாரதி கவிதைகளுக்கு இவரது கைவண்ணத்தில்தான் ஓவியங்கள் உருப்பெற்றன. பாரதியின் கவிதைகளை மக்களிடம் பரவலாகக் கொண்டுசேர்த்ததில் இவற்றுக்குத் தனி இடம் உண்டு. எண்பத்து மூன்று ஓவியங்களை முதன்முறையாகக் கண்டெடுத்து அரிய பின்னிணைப்புகளோடும் விரிவான ஆராய்ச்சி முன்னுரையோடும் இத்தொகுதியைப் பாரதி அறிஞர் ய. மணிகண்டன் தமிழுலகுக்கு வழங்கியிருக்கிறார். பாரதியியல், இதழியல், கலையியல் என்னும் முக்களங்களிலும் ஒளிபாய்ச்சும் ஓவியத் தொகுதி இது.
ISBN : 978-81-960589-3-7
SIZE : 152.0 X 15.0 X 225.0 cm
WEIGHT : 210.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
பருவநிலை மாற்றம்
-சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி,
கல்லூரி மாணவர்களும மேலும்
வெட்டுக்கிளிப் பெண்
-பிலிப்பைன்ஸ் - ஆஸ்திரேலிய எழுத்தாளர் மெர்லிண்டா பாபிஸ் எழுதியிருக்கும்
‘வெட்டுக்கிளிப் ப மேலும்
அபராஜிதன்
-இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் இலங்கையில் போர் முடிவுக்கு
வந்திருக்கவில்லை. போர் உச்சம் மேலும்
மகாபாரதம்
-பேரரசுகள் உருவாகியிருக்கின்றன, வீழ்ந்திருக்கின்றன; பல்வேறு மதப்
பிரிவுகள், தத்துவப் பார் மேலும்
அறவி
-அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள்
பொருத்திப் பார்த்தால் துறவின மேலும்
நள்ளிரவும் பகல் வெளிச்சமும்
-மனித உறவுகள் மீது சமூகத்தின் விதிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன
என்பதை ‘நள்ளிரவும் பகல் வெ மேலும்