Your cart is empty.
பேசத் துணிந்த எழுத்துக்கள் ( பெருமாள்முருகன் படைப்புலகம் )
-எழுத்தாளர் பெருமாள்முருகனின் படைப்புகள் குறித்த இருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கு திருச்சி, தந்தை பெரியார் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 2025, ஜனவரி 7, 8 தேதிகளில் நடைபெற்றது. பெருமாள்முருகனின் புனைவுகள், அல்புனைவுகள், பிற மொழிகளுக்குச் சென்ற அவரது ஆக்கங்கள் ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் உரைகளும் உரையாடல்களும் நிகழ்ந்தன. எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளரின் உரைகள் கட்டுரை வடிவில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆய்வாளர்களில் பெரும்பாலோர் இளம் தலைமுறையினர். அவர்களின் வேறுபட்ட பார்வையை முன்வைக்கும் தீர்க்கமான கட்டுரைகள் இடம்பெறுவது இந்நூலின் தனித்துவம்.
பேராசிரியர்கள் க. காசிமாரியப்பனும் அ. செல்வராசுவும் தொகுத்துள்ள இந்த நூல் சமகாலப் படைப்பாளி ஒருவரின் பன்முகச் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக அறியவும் மதிப்பிடவும் பெரிதும் துணைசெய்யும்.