Your cart is empty.
பேய் முலை அமுது
பால் அடையாளச் சிக்கல்களை நுட்பமாகவும் தன் மரபின் பாரம்பரியத்துடன் இசைந்தும் கையாண்ட முதன்மையான கவிஞர்களுள் ந. ஜயபாஸ்கரனும் ஒருவர். அச்சிக்கல்களுடன் போராடிக்கொண்டிருக்கும் அவரது கவிதைப் பயணம் திருவாலங்காட்டுக்குப் பால் அடையாளங்களற்றுப் பால்களைக் குழப்பும் அர்த்தநாரியின் காலடியில் அமர்ந்திருக்கும் காரைக்கால் பேயிடம் வந்துசேர்ந்திருக்கிறது. உலகைத் துறந்து பால் அடையாளங்களைத் துறப்பதே அச்சிக்கல்களுக்கான தீர்வு என்பதுபோல். இக்கவிதைகளில் விடைபெறும் தொனியும் இருக்கிறதோ என்று என்னையே கேட்டுக்கொண்டேன்; அது உண்மையெனில் பாதகம் ஒன்றுமில்லை. பெரியம்மாவின் சுவாரசியத்தைக் கவிதையில் கைப்பற்றியதே அவர் கவிதையின் உச்சம்.











