Your cart is empty.
தமிழ் இலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு
-தாய்த் தெய்வங்களால் நிரம்பியது தமிழ்ப் பெருநிலம். திரும்பும் திசையெங்கும், தெருக்களில் மட்டுமின்றி மலைகளில், கடலில், பல்வேறு வண்ணங்களில், விதவிதமான வடிவங்களில் காட்சியளிப்பவை இத்தெய்வங்கள். தாய்த் தெய்வ வழிபாடு, சாத்தன் வழிபாடு, பகவதி வழிபாடு குறித்து விரிவான ஆய்வும் அபூர்வமான தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பண்டைக்காலம் முதல் சமகாலம் வரையிலான தாய்த் தெய்வங்களின் தோற்றம், வாழ்வு, வரலாற்றைத் தேடிப் பதிவுசெய்திருக்கிறார் அறிஞர் பி.எல். சாமி. பழந்தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் ஆர்வமுடையவர்கள் அனைவருக்குமான அரிய நூல்.
தமிழ் மக்களின் நாகரிகம், மரபுகள், தாய்த் தெய்வங்களை வழிபடுவதற்கான காரணங்கள் ஆகியவற்றை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மானுடவியல் நோக்கில் இந்நூலை எழுதியிருக்கிறார் பி.எல். சாமி.











