Your cart is empty.
ஆட்டுதி அமுதே
-
-சமகால நவீன கவிதையின் குறிப்பிடுவதற்குரிய சுய முகங்களில் ஒன்று பா. தேவேந்திரபூபதியினுடையது. பத்துப்பதினைந்து கவிஞர்கள் சமகால தமிழ்க்கவிதையை உள்ளடக்கத்தின் பழம்பாசியிலிருந்து அகற்றி, அதேசமயம் தொன்மரபின் தொடர்ச்சி கெடாமல் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இது ஒரு கவிதை இயக்கமாகத் தமிழில் நடந்தது. உலகின் எந்தச் சிகரத்திலிருக்கும் கவிஞனோடும் சம அந்தஸ்துக்கும் மேலே உறவுகொள்ளும் தகுதி கொண்டது சமகாலத்தின் இந்த மாற்றம். இதன் சுவடுகளால் நிறைந்தவை தேவேந்திரபூபதியின் கவிதைகள். அன்றாட நிகழ்வுகளில் சகலவிதமான அனுபவங்களையும் ஆன்மீகத் தளத்திற்கு நகர்த்த இக்கவிதைகள் முயற்சி செய்கின்றன. புற தளங்களின், அலங்காரங்களின் பாசாங்குகளைக் கடக்கவும், அன்பின் ஸ்தூல வடிவை முன் நகர்த்தவும் எத்தனிக்கும் இவரது கவிதைகள்; ‘அன்பு வெகு தூரத்திலிருப்பது! வழியெங்கும் தடைகள்’ என்பதைக் கண்டுபிடிக்கவும் செய்கின்றன. புற உலகின் பற்றுதல்களை அன்பின் கரத்தால் புறந்தள்ளுதலின் மொழி உருவமே இந்த ‘நடுக்கடல் மௌனம்.’ லக்ஷ்மி மணிவண்ணன்
-அகால மரணமடைந்த ஒரு பெண்ணோ ஆணோ தெய்வமாகி வழிபாடு பெறுவது ஒரு மரபு. இந்த மரணம் கொலை, விபத்து, தற்கொலை என்னும் காரணங்களால் அமையலாம். சாதி மீறிய காதல் திருமணங்கள் தொடர்பான கொலையைச் சாதி ஆணவக் கொலை என்று சொல்வது இன்று பொது வழக்காக உள்ளது. ஆணவக் கொலைக்குப் பின்னால் பணம், அதிகாரம், சாதி என்பன மட்டுமின்றிக் குடும்பப் பெருமிதமும் கொலைகளுக்குத் தூண்டுதலாக அமைகிறது. இப்படிப்பட்ட இறப்புகளுக்குப் பின் தெய்வமாக்கப்பட்ட பதினான்கு பேரின் கதைகள்தான் இந்த நூல்; இதைப் புலனாய்வு அறிக்கை என்றும் கூறலாம். கதைகளை மட்டும் சொல்லாமல் அவற்றின் குற்றப் பின்னணி, தெய்வமாக்கப்பட்ட பின் உருவான வழிபாட்டு முறை என எல்லாவற்றையும் நூலாசிரியர் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.
-வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். ‘சப்தங்க’ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள். ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மக’ளில் அதே போன்ற மனிதர்கள் இடம்பெற்றாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது. சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.
-ஏவாளின் கதையை மறு எழுத்தாக்கம் செய்யும் சிவசங்கருக்கு பைபிள் கதையிலிருந்து கில்நாஸ்டியா வரையிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன; விமர்சனங்கள் உண்டாகின்றன; அதிருப்தியும் ஆவேசமும் ஏற்படுகின்றன. கேள்விகளும் விமர்சனங்களும் பல்வேறான வடிவங்களிலும் சாத்தியப்பாடுகளிலும் புனைவாகின்றன. ஏவாளின் சித்தப் பிரமையும் பிதற்றலும் தூக்கிலேறப் போகின்றவனின் பதற்றமும் கலைஞர்களின் தவிப்புகளும் வெளிப்படுகின்றன. கலைஞனின் தேடல் சிரத்தையும் அக்கறையும் கொண்டிருக்கும்போது, பல நூற்றாண்டு காலவெளியைத் தொட்டு, இத்தருணத்தில் சிலிர்ப்பையும் சிறகடிப்பையும் ஏற்படுத்திட இயலும். இது சிவசங்கரின் எழுத்தில் இயல்பாக நிகழ்கிறது.
-பாலியல் தொழிலாளர் அமைப்பின் தலைவியும் பாலியல் தொழிலாளியும் குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும் எழுத்தாளருமாக வாழும் நளினி ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய காலத்தினுள் மிக அதிகமான வாசகர்களைச் சென்றடைந்த, தேசமெங்கும், அறிவுத் தளங்களிலும் ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய மலையாள சுயசரிதை நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
-பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலவிய சமூகக் கொடுமைகளால் ‘உள நோயாளர் விடுதி’ என்று அழைக்கப்பட்ட கேரளத்தில் மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முதன்மையான போராளிகளில் ஒருவர் அய்யன்காளி. தாம் பிறந்த புலையர் இனத்தைத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப் போராடியதுடன் பேதமற்ற பொதுவான சமூகநீதிக்காகவும் அயராது சமர் புரிந்தவர். கல்வியினாலேயே பாரில் மேன்மைகள் எய்தலாகும் என்று உணர்ந்தவர்; உணர்த்தியவர். தீண்டத்தகாதவர்களுக்கு முதல் கல்விக்கூடத்தை உருவாக்கினார். பொதுவெளிகள் எல்லாருக்குமானவை என்று அறிவித்தவர்; அதைச் செயல்படுத்தியவர். ‘வில் வண்டி சமரம்’ மூலம் சாதிய ஒடுக்குமுறைக்கு அறைகூவல் விடுத்தார். அய்யன்காளியின் சமூக நீதிப் போராட்டங்கள் இன்று கேரள வரலாற்றின் எழுச்சி தரும் பக்கங்கள். வெறும் சமூகநீதிப் போராளி மட்டுமல்ல; எல்லா உயிரும் ஒன்றென்று கருதிய ஆன்மிகவாதி. மானுட விடுதலைக்காகப் பாடுபட்ட அறிவுலகப் பகலவன். இன்று அவர் நவீன கேரளத்தின் ‘மகாத்மா’. உணர்வூட்டுவதும் படிப்பினை அளிப்பதுமான அய்யன்காளியின் தன்னலம் துறந்த வாழ்க்கை வரலாற்றை விரிவான ஆய்வுக் குறிப்புகளுடனும் திருத்திச் சரிபார்க்கப்பட்ட தரவுகளுடனும் அரிய புகைப்படங்களுடனும் முன்வைக்கிறது இந்த நூல்.
-இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை.
எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் சு.ரா.வின் ஆளுமை இந்த நேர்காணல்களில் வெளிப்படுகிறது. சிந்தனையின் வீச்சும் ஆழ்ந்த கரிசனமும் கூடியவரை பிரச்சினையின் அனைத்துக் கோணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அணுகுமுறையும் சு.ரா.வின் கருத்துலகின் அடிப்படைகள். அவற்றை இந்த நேர்காணல்களிலும் காணலாம். சு.ரா. முன்னிறுத்தும் வாழ்வின் விழுமியங்களுக்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்குமிடையில் இருக்கும் ஒற்றுமைகளையும் உணரலாம்.
மிகையற்ற, சுய பிம்பக் கட்டமைப்பில் நாட்டமற்ற, அசல் சிந்தனைகளைக் கொண்ட இந்த உரையாடல்களில் கேட்கும் உண்மையின் குரல் இந்த நேர்காணல்களைத் தனித்துக் காட்டுகிறது
--இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை.
எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் சு.ரா.வின் ஆளுமை இந்த நேர்காணல்களில் வெளிப்படுகிறது. சிந்தனையின் வீச்சும் ஆழ்ந்த கரிசனமும் கூடியவரை பிரச்சினையின் அனைத்துக் கோணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அணுகுமுறையும் சு.ரா.வின் கருத்துலகின் அடிப்படைகள். அவற்றை இந்த நேர்காணல்களிலும் காணலாம். சு.ரா. முன்னிறுத்தும் வாழ்வின் விழுமியங்களுக்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்குமிடையில் இருக்கும் ஒற்றுமைகளையும் உணரலாம்.
மிகையற்ற, சுய பிம்பக் கட்டமைப்பில் நாட்டமற்ற, அசல் சிந்தனைகளைக் கொண்ட இந்த உரையாடல்களில் கேட்கும் உண்மையின் குரல் இந்த நேர்காணல்களைத் தனித்துக் காட்டுகிறது
-இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை.
எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் சு.ரா.வின் ஆளுமை இந்த நேர்காணல்களில் வெளிப்படுகிறது. சிந்தனையின் வீச்சும் ஆழ்ந்த கரிசனமும் கூடியவரை பிரச்சினையின் அனைத்துக் கோணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அணுகுமுறையும் சு.ரா.வின் கருத்துலகின் அடிப்படைகள். அவற்றை இந்த நேர்காணல்களிலும் காணலாம். சு.ரா. முன்னிறுத்தும் வாழ்வின் விழுமியங்களுக்கும் இலக்கிய மதிப்பீடுகளுக்குமிடையில் இருக்கும் ஒற்றுமைகளையும் உணரலாம்.
மிகையற்ற, சுய பிம்பக் கட்டமைப்பில் நாட்டமற்ற, அசல் சிந்தனைகளைக் கொண்ட இந்த உரையாடல்களில் கேட்கும் உண்மையின் குரல் இந்த நேர்காணல்களைத் தனித்துக் காட்டுகிறது