Your cart is empty.
யானைகளும் அரசர்களும்: சுற்றுச்சூழல் வரலாறு
உலகில் 13 ஆசிய நாடுகளில் யானைகள் இருக்கின்றன என்றாலும் யானைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்தியாவில்தான். சுமார் 30,000 யானைகள் இங்கு வாழ்வதாகக் கணிப்பு. இந்த நூல் போர் யானைகளைப் பற்றியது. ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக யானைகள் ஆசியாவின் பல போர்க்களங்களில் இயங்கின.
போரில் இவை முக்கியப் பங்காற்றின. யானைகளின் சிறப்பையும் தேவையையும் உணர்ந்திருந்த அரசர்கள், யானைகளைப் பாதுகாக்க வேண்டுமென்றால் காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்று உணர்ந்திருந்தார்கள் அரசர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான தொடர்பை வரலாற்று ஆதாரங்களுடனும் உரிய தர்க்கங்களுடனும் இந்த நூல் விவரிக்கிறது.
வரலாற்று ஆய்வாளர் தாமஸ் டிரவுட்மன்னின் அழமான ஆய்வின் விளைவாகப் பிறந்த இந்த நூல் இந்திய யானைகளையும் அரசர்களையும் பற்றிய அரிய, சுவையான பல செய்திகளையும் பார்வைகளையும் தருகிறது.



