Your cart is empty.
செயற்கை நுண்ணறிவின் சுருக்கமான வரலாறு
-செயற்கை நுண்ணறிவு (AI) இன்று நமது வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இந்தத் தொழில்நுட்ப அற்புதம் மிக விரைவாக நம் வாழ்வை ஆக்கிரமித்துவிட்டது. ஆனால் இதன் வளர்ச்சி அத்தனை வேகமாக நடைபெற வில்லை. பல பதிற்றாண்டுகளின் உழைப்பு இதற்குப் பின்னால் இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவின் நீண்ட நெடிய வரலாற்றைச் சுருக்கமாகத் தருகிறார் டோபி வால்ஷ். செயற்கை நுண்ணறிவின் உருவாக்கம் பற்றி எடுத்துக் கூறும் அவர் இந்தத் தொழில்நுட்பம் குறித்த சில கட்டுக்கதைகளையும் தகர்க்கிறார்.
இஸ்ரோவில் அறிவியலாளராகப் பணிபுரியும் பெ. சசிக்குமாரும் அவருடைய மனைவி எம். ஜோதிமணியும் இணைந்து இந்த நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். சசிக்குமார் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தி எழுதிய ‘மனிதனா இயந்திரமா: வெல்லப்போவது யார்?’ நூலைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது.



