-1915, சத்தியாக்கிரகத்தின் மூலம் தென்னாப்பிரிக்க இந்தியர்களுடைய உரிமைகளை மீட்டுத்தந்த தலைவராகத் தாயகம் திரும்புகிறார் காந்தி. இனி இந்திய விடுதலைக்குப் பங்களிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். ஆனால், …
மேலும்
-1915, சத்தியாக்கிரகத்தின் மூலம் தென்னாப்பிரிக்க இந்தியர்களுடைய உரிமைகளை மீட்டுத்தந்த தலைவராகத் தாயகம் திரும்புகிறார் காந்தி. இனி இந்திய விடுதலைக்குப் பங்களிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். ஆனால், அதற்கு முன்னால் இந்தியாவை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் அவருடைய அரசியல் ஆசானான கோபால கிருஷ்ண கோகலே.
காந்தி ஓராண்டுக்கு இந்தியாவைச் சுற்றிப்பார்க்கிறார். மக்களை நெருக்கமாக அணுகிப் புரிந்துகொள்கிறார். அதன்பிறகு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக இறங்குகிறார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதன்மைத் தலைவராக, தேசத் தந்தையாகக் காந்தி பரிணாம வளர்ச்சி பெற்றதற்கான அடித்தளம், இந்தப் பயணத்தின்போது அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களும் பாடங்களும்தான். காந்திக்கு இந்தியாவைப் புரியவைத்த அந்த ஓராண்டுப் பயணத்தைப் பற்றிய விரிவான பதிவு இந்நூல்.