Your cart is empty.
எழுத்துக்கு அஞ்சும் சமூகம்
-பெருமாள்முருகனின் படைப்பனுபவங்கள், வாழ்க்கைக் கூறுகள், சமூகப் பார்வை, ஆளுமைப் பகிர்வு ஆகியவற்றை ஆழமாக உணரச் செய்பவை இந்த நேர்காணல்கள். மேட்டாங்காட்டுக் களத்துமேட்டில் அந்தி சாயும் வேளையில் பெருமாள்முருகனுடன் அமர்ந்துகொண்டு கேட்கும் ஆசுவாசமான கதைகள் இவை.
நாவல், கவிதை, சிறுகதை, கட்டுரை, பதிப்பு, கீர்த்தனை என வெவ்வேறு இலக்கிய வடிவங்களில் தடம் பதித்துவரும் பெருமாள் முருகனின் ஒவ்வொரு நேர்காணலும் அவரது ஆளுமையின் பரிமாணங்களைக் காட்டுகின்றன. படைப்பு வாழ்க்கையில் சந்தித்த நெருக்கடிகளும் போராட்டங்களும் அவை கற்பித்த மௌனமும் வார்த்தைகளின் இடுக்குகளில் இழையோடியிருக்கின்றன.
சொற்களுக்கு இடையிலான மௌனங்களை நுட்பமாக உய்த்துணர்பவர்களுக்கு இந்தத் தொகுப்பு முழுமையான இலக்கிய அனுபவத்தை அளிக்கும்.
- பிரேம்குமார்
