Your cart is empty.
கொத்து 10 (சக்கரவாளம் ,மொழிபொயர்ப்புப்பார்வைகள் , வடமொழிஇலக்கியவரலாறு )
-நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
-நூல் கொத்துக்கள்
சிறப்புத் தள்ளுபடி விற்பனை
-இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குப் புதிய கவிதை அனுபவங்களைக் கொண்டுவந்த வியத்தகு கவி சல்மா. சஞ்சலமும் தவிப்பும் ஆற்றாமையின் வலியும் நுண்ணுணர்வுடன் கூடிய அழகும் அவரது துவக்க காலக் கவிதைகளுக்கு இணக்கமானவையாக அமைந்தன. இந்தத் தொகுப்பில் அவரது கவிதைகளின் பார்வையும் பரிமாணங்களும் பாடுபொருளும். அழகும் பரந்து விரிந்துள்ளன. இப்போது அவருக்கு வாய்த்திருப்பவை பதற்றம் குறைந்த நாட்களில் தீர்க்கமாக வீசும் தடைகளற்ற காற்றும், கடல் பழகுதலும் கனவுகள் வராத இரவும் எப்போதும் ‘இன்னொரு பயணமும்’. தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைபோலப் புதிய வாழ்வு, புதிய வீச்சு, புதிய படிமங்கள் என அவருடைய கவிதைகள் இப்போது மென்மையின் குரல் ஒலி. சேரன்
-உலக கலைப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு பரிமாணம் பெற்றவை சோழர் செப்புச்சிலைகள். பன்னாட்டளவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் எல்லாவற்றிலும் இவை ஓரிரண்டாவது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்நூல் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்த செப்புப் படிமங்களை குவிமையமாக வைத்துப் பேசுவதுடன், மற்ற இடங்களிலுள்ள கலையழகு மிக்க சில செப்புப் படைப்புகளையும் கவனிக்கின்றது. இந்த திருமேனிகளை உருவாக்கும் முறை, ஆலய மரபொழுக்கத்தில் அவற்றின் இடம், உருவநியதிகள் இவற்றைப் பற்றியும் இந்நூல் விவரிக்கின்றது. சோழ மன்னர்கள் வென்ற போர்கள், எழுப்பிய ஆலயங்கள், கொடுத்த நல்கைகள் இவற்றின் பின்புலத்தில் செப்புப் படிமங்களின் தோற்றம் பற்றி இந்நூல் ஆராய்கின்றது. கலை வரலாற்றில் அடிக்கடி எழுப்பப்படும் “சோழர்களுக்கு பின்னர் இந்தச் சிலைகள் என்னவாயின?” என்ற கேள்வியையும் இந்நூல் எதிர்கொள்கின்றது. தென்னிந்திய வரலாற்றுப் பின்னணியில் இந்தப் புதிருக்கு விடை தேடும் நூலாசிரியர் அவை அழிக்கப்படவில்லை, வெவ்வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன என்கிறார். அதே மூச்சில் அண்மையில் அகமதாபாதிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட இரு செப்புச்சிலைகளின் அடையாளத்தைப் பற்றி அடிப்படையான சில கேள்விகளை எழுப்புகின்றார்.
-பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ்சன் அத்தகைய சூழல்களை அமைத்துத் தருகிறார். அவற்றில் மனிதப் பண்புகள் வெளிப்படுவதை ஆசையோடு நம்முன் வைக்கிறார். படைப்பாளன் உலகின் மீதுள்ள பிரியத்தை, நம்பிக்கையை இப்படித்தானே வெளிப்படுத்த முடியும். பிரபஞ்சனின் இருபது கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளிவரும் இத்தொகுப்புக்காக அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை ஒருசேர வாசித்தேன். அந்த அனுபவம் மானாவாரி வேளாண்மை செழித்திருக்கும் பரந்த நிலங்களுக்குள் விடிகாலை வேளையில் காலோயச் சுற்றிவந்ததைப் போலிருந்தது. ஈரம் என் கால்களில் ஏறி உடம்பு முழுவதற்கும் பரவிற்று. ஈரம் என்பது அன்பு, கருணை, நம்பிக்கை, தியாகம், உதவி, பற்று உள்ளிட்ட நல்லியல்புகள் அனைத்துக்கும் பொருந்தும். செழித்த கதிர்களில் விருப்பத்திற்கு உட்பட்டும் விதவிதமானவற்றை ருசித்துப் பார்க்கும் வேட்கையினாலும் நேர்த்தியின் ஈர்ப்பாலும் சிலவற்றைத் தேர்வு செய்து பசியாறும் சிட்டுக்குருவியாகச் செயல்பட்டிருக்கிறேன்.
-புதிய மொழியாக்கம், முழுவதும் வண்ணப் பக்கங்கள்
ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி எழுதிய ‘Le Petit Prince’ என்னும் பிரெஞ்சு நாவல் உலகின் சாதனைப் படைப்புகளில் ஒன்று. இந்த நாவல் குழந்தையின் களங்கமற்ற பார்வையின் வழியே உலகைக் காண்கிறது. இந்தப் பார்வையில் வெளிப்படும் தரிசனங்கள் பெரியவர்களுக்கான திறப்புகளாக இருக்கின்றன. பிரெஞ்சு மொழி அறிஞரும் பல்வேறு படைப்புகளைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் மொழியாக்கம் செய்துள்ள எஸ்.ஆர். கிருஷ்ணமூத்தியின் இந்த மொழியாக்கம் கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டதாக அமைந்துள்ளது.
பெரும்பான்மைத் தமிழரின் வாழ்வுடன் இணைந்தது கோலம். ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் கோலம்போடும் வழக்கம் தமிழர் மரபில் ஊறியது. கோலம் தொடர்பான மத நம்பிக்கைகளைத் தவிர்த்துவிட்டுக் கோலத்தின் பன்முகக் கூறுகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த நூலை லீலா வெங்கட்ராமனும் முனைவர் வெ. கிருஷ்ண மூர்த்தியும் உருவாக்கியிருக்கிறார்கள். கோலத்தை விஞ்ஞான ரீதியில் அணுகி, தகவல்களைத் தருகிறார்கள். கோலத்தின் வரலாறு, வகைகள், அழகு, மீனாட்சி அம்மன் கோவிலில் போட்ட லட்சம் புள்ளிக் கோலம் வடிவமைக்கப்பட்ட விதம், இணையத்தில் கோலம், இதயக் கமலம், ஐஸ்வர்யக் கோலம், கோலப் புதிர்கள், விளையாட்டுக்கள், கோலத்திற்கான மென்பொருள்கள் என்று பல தலைப்புகளில் கோலம் பற்றிய செய்திகளை இதில் காணலாம். கணிதத் துறைக்கும் கோலத்திற்கும் உள்ள தொடர்பு, பயிற்சிகள் முதலானவையும் உள்ளன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோலக் கலையை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாகியிருக்கும் நூல் இது.
-சூ டிஷான், சீனாவில் பரவலாக அறியப் படும் எழுத்தாளர். 1920களில் அவர் எழுதிய இந்த மூன்று கதைகள், சீனாவின் புதிய கலாச்சார இயக்கத்தில் அறிவியலும் வெளிப்படையான கருத்துக்களும் பரவியிருந்த காலத்தில் அவருடைய தனிப்பட்ட பார்வையைப் பிரதிபலிக்கின்றன. இந்தியத் தத்துவத்தால் ஆழ்ந்த பாதிப்புக்குள்ளான அவர், வாழ்வை மீட்டெடுப்பதில் மதத்திற்கு உள்ள சக்தியை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்.
‘மெட்ராஸ் வணிகரின் சீன மனைவி’ (ஷாங்ரென் ஃபு) கதையில், மலேசியா சென்ற சீனப் பெண், மெட்ராஸில் ஒரு முஸ்லிம் வணிகரிடம் விற்கப்பட்டு, இந்திய மொழிகளையும் மதங்களையும் கற்று ஆன்மிக விடுதலை அடைகிறாள். பிற கதைகள் மனிதர்களுக்கும் சமூகத்துக்கும் விதிக்கும் இடையிலான உறவுகளைப் பற்றியவை. தனிமனிதர்கள் விதியுடன் போராடி வாழ்வதை இக்கதைகள் ஆராய்கின்றன.
சீன - தமிழக வரலாற்றுத் தொடர்புகள் பெரும்பாலும் இராஜதந்திரம், வர்த்தகம் சார்ந்தே அமைந்திருந்தன. இந்தக் கதைகள் அந்தக் காலகட்டத்தில் சீனா, இந்தியா, தெற்காசியாவுக்கு இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.
ஈஸ்வரி (சோ சின்) இந்தக் கதைகளைச் சீனத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
-லவ் ஜிகாத்
மக்கள்தொகை ஜிகாத்
முஸ்லிம்களைத் திருப்திப்படுத்துதல்
கட்டாய மதமாற்றம்
இவை வெறும் சொற்களல்ல; இந்தியாவின் அன்றாட உரையாடல்களை க்கிரமித்துள்ள வலுவான பரப்புரைகள்.
· அரசியல்வாதிகளின் தூண்டுதல்
· ஊடக விவாதங்கள்
· சமூக வலைதளங்களில் ஓயாமல் பகிரப்படும் செய்திகள்
இவற்றால், ஒரு பெரும் மக்கள் கூட்டம் இந்தப் பொய்களையே நிஜமென நம்பத் தொடங்கியுள்ளது. இந்தக் கூற்றுகள் உண்மை யின் அடிப்படையில் அமைந்தவையா அல்லது அதிகாரத்தைத் தக்கவைக்கத் திட்டமிட்டுப் பரப்பப்படும் கற்பனைக் கதைகளா என்பதை இந்நூல் விசாரணைக்கு உட்படுத்துகிறது.
தெளிவான பார்வை, நேர்மையான வாதங்கள், நுணுக்கமான கள ஆய்வுகள் ஆகியவற்றுடன் எழுதப்பட்டுள்ள இந்த நூல், பொய்களை முறியடிக்கும் வலிமையான ஆயுதம்.
-பெரும்பான்மைத் தமிழரின் வாழ்வுடன் இணைந்தது கோலம். ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் கோலம்போடும் வழக்கம் தமிழர் மரபில் ஊறியது. கோலம் தொடர்பான மத நம்பிக்கைகளைத் தவிர்த்துவிட்டுக் கோலத்தின் பன்முகக் கூறுகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த நூலை லீலா வெங்கட்ராமனும் முனைவர் வெ. கிருஷ்ண மூர்த்தியும் உருவாக்கியிருக்கிறார்கள். கோலத்தை விஞ்ஞான ரீதியில் அணுகி, தகவல்களைத் தருகிறார்கள்.
கோலத்தின் வரலாறு, வகைகள், அழகு, மீனாட்சி அம்மன் கோவிலில் போட்ட லட்சம் புள்ளிக் கோலம் வடிவமைக்கப்பட்ட விதம், இணையத்தில் கோலம், இதயக் கமலம், ஐஸ்வர்யக் கோலம், கோலப் புதிர்கள், விளையாட்டுக்கள், கோலத்திற் கான மென்பொருள்கள் என்று பல தலைப்புகளில் கோலம் பற்றிய செய்திகளை இதில் காணலாம். கணிதத் துறைக்கும் கோலத்திற்கும் உள்ள தொடர்பு, பயிற்சிகள் முதலானவையும் உள்ளன.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோலக் கலையை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவாகி யிருக்கும் நூல் இது.
1970களின் இறுதியில் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியது ரஷ்யா. அங்கு அது ஏற்படுத்திய அரசியல் குழப்பங்கள், ஆட்சிக் கவிழ்ப்புக்களின் விளைவாகப் போர்த் தரகர்கள் எழுச்சி பெற்றார்கள். தீவிரவாதம் செழித்தது. கொலை, கொள்ளை, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகின. கல்வி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் தனிமனித உரிமைகளும் முடங்கின. இந்தப் பிரச்சினைகளால் பந்தாடப்பட்ட ஒருவன் எவ்வாறு ரஷ்யப் படைகளிடமிருந்து தப்பித்து, வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, இறுதியாக அமெரிக்காவில் குடிபுகுந்து, அங்கே தன்னுடைய வாழ்வையும் குடும்பத்தையும் மீண்டும் கட்டமைக்கிறான் என்பதைச் சாகச நாவல்களுக்கே உரிய தன்மையுடன் சொல்கிறது இந்நூல். ஒரே சமயத்தில் அனுபவப் பதிவாகவும் பயண இலக்கியமாகவும் திகழும் இப்படைப்பு ஆதிக்க சக்திகளின் நடவடிக்கைகள் பற்றியும் தீவிரவாதத்தின் பரிணாமத்தைப் பற்றியுமான நமது அறிதலை விரிவுபடுத்தக்கூடியது.
வல்லுறவு வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதா? · வல்லுறவு இறப்பைவிட மோசமானதா? வல்லுறவுக்கும் ஆசைக்கும் என்ன தொடர்பு? · வல்லுறவு செய்யப்படுவது யார்? செய்வது யார்? · ஒப்புதல் என்றால் என்ன? · வல்லுறவுக்கு ஆளானவர்கள் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் மீண்டும் பெறுவது எப்படி? இப்படிப் பல முக்கியமான கேள்விகளை எழுப்பிக்கொண்டு விடையளிக்கிறது இந்த நூல். கூட்டு வல்லுறவுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டுவந்து அதைப் பற்றிய உரையாடல்களைத் தொடங்கிய முதல் பெண் சொஹைலா அப்துலலி. முப்பது ஆண்டுகளாக எழுத்தாளராகவும் கல்வியாளராகவும் ஆலோசகராகவும் செயலாற்றிவரும் அவர், நாம் வல்லுறவைப் பற்றிப் பேசத் தவறிய பல கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைக்கிறார். நமது பேச்சுக்கள், மௌனங்கள், ஆழமான அச்சங்கள், நாம் தவிர்க்கும் கேள்விகள் என அனைத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து வல்லுறவைப் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்தி உரையாடத் தூண்டும் கருவி இந்நூல்.
-செயற்கை நுண்ணறிவு (AI) இன்று நமது வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இந்தத் தொழில்நுட்ப அற்புதம் மிக விரைவாக நம் வாழ்வை ஆக்கிரமித்துவிட்டது. ஆனால் இதன் வளர்ச்சி அத்தனை வேகமாக நடைபெற வில்லை. பல பதிற்றாண்டுகளின் உழைப்பு இதற்குப் பின்னால் இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவின் நீண்ட நெடிய வரலாற்றைச் சுருக்கமாகத் தருகிறார் டோபி வால்ஷ். செயற்கை நுண்ணறிவின் உருவாக்கம் பற்றி எடுத்துக் கூறும் அவர் இந்தத் தொழில்நுட்பம் குறித்த சில கட்டுக்கதைகளையும் தகர்க்கிறார்.
இஸ்ரோவில் அறிவியலாளராகப் பணிபுரியும் பெ. சசிக்குமாரும் அவருடைய மனைவி எம். ஜோதிமணியும் இணைந்து இந்த நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். சசிக்குமார் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தி எழுதிய ‘மனிதனா இயந்திரமா: வெல்லப்போவது யார்?’ நூலைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது.