Your cart is empty.
தன்னைத்தான் காக்கின் (இ-புத்தகம்)
உலகமயமாக்கலின் உதிர்காலம் இது. எண்ணற்ற நம்பிக்கை களையும் வாய்ப்புக்களையும் உருவாக்கிய உலகமயம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். கடந்த நாற்பதாண்டுக் காலமாக மாணவர்களுக்கும் இளைஞர் களுக்கும் பல சவால்கள் உருவாகியுள்ளன. அந்தச் சவால்களை எதிர்கொண்டு வெல்வதற்கான திட்பத்தையும் நுட்பங்களையும் இந்நூலில் எளிமையான மொழியில் விளக்குகிறார் சுப. உதயகுமாரன். சுற்றுச்சூழலுக்காகப் போராடிவரும் இந்நூலாசிரியர் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். அந்தச் சூழல்களோடு இணைந்து உலகளாவிய மக்களின் குணாம்சங்களையும் திறன்களையும் கற்றுத் தெளிந்திருக்கிறார். பரந்த உலகப் பார்வையையும் ஆழ்ந்த அனுபவங்களையும் கொண்ட உதயகுமாரன் வாழ்வியல் சாரங்களை நம்முன் படைக்கிறார் .











