Your cart is empty.
எஸ்தர்
-சென்ற நூற்றாண்டின் 76களில் வெளியான 'எஸ்தர்' சிறுகதைத் தொகுதி, தமிழ்ப் புனைகதை வெளியில் அரை நூற்றாண்டைக் கடந்து இன்றும் தன் அடர்த்தி குறையாமல் நிலைத்திருக்கிறது. எழுபதுகளின் தமிழ்ச் சிறுகதை மரபில் எந்தவிதப் பாசாங்குமற்று, வாழ்வை அதன் அசல் தன்மையோடு எதிர்கொண்டவர் வண்ணநிலவன். அவரது புனைகதை உலகிற்குள் நுழைவதற்கான வாசல் இந்நூல்.
உதாசீனங்களின் நடுவிலும் ஈரம் காயாத மனங்கள், வறுமையின் விளிம்பிலும் அறம் நழுவாத எளிய மனிதர்கள், அகம் உருகும் தருணங்களின் மௌனம் என இத்தொகுப்பில் உள்ள 17 கதைகளும் வாசகரது மனதை அலைக்கழிக்கின்றன. வார்த்தைகளின் ஆடம்பரமில்லாத நேரடிப் பகிர்வும், நுட்பமான பாத்திர வார்ப்பும் கொண்ட இக்கதைகள் தமிழ் யதார்த்தச் சிறுகதைப் போக்கிற்குத் தனித்துவமான அழகியலைக் கூட்டியவை.
வாழ்வின் துயரங்களுக்கு இடையிலும் மானுடப் பற்றின் சுனைகளைக் கண்டடையும் இப்படைப்புகள், வாசித்து முடித்த பிறகும் நம் மன அடுக்குக்குள் தீராத நடுக்கத்தையும் பிரியத்தையும் எஞ்சியிருக்கச் செய்கின்றன.






