Your cart is empty.
உலகப் புகழ்பெற்ற மூக்கு
கதைகள் நம் வாழ்வில் கொட்டிக் கிடக்கின்றன. அடையாளம் காணத் தெரிந்த கண்களுக்கு அவை தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன. மிகமிகச் சாதாரண நிகழ்வொன்று பெரும்பாலானோர் கடந்துபோய்விடக்கூடிய நிகழ்விலும் மகத்தான கதை ஒன்று ஒளிந்திருக்கலாம். வைக்கம் முகம்மது பஷீரைப் போன்ற மகத்தான கலைஞர்களுக்கு மட்டும் அது தெரிந்துவிடுகிறது. மிகச் சாதாரணமான, மிக எளிமையாகத் தோற்றமளிக்கும் அன்றாட வாழ்வின் சலனங்கள் இந்தக் கலைஞனின் கண்பட்டு அற்புதப் படைப்புகளாக உருப்பெறுகின்றன.
இயல்பான சந்திகளில், மொழிநடையில் கதை சொல்லும் பஷீர் தன்னுடைய மிக இயல்பான, தனித்துவமிக்க எடுத்துரைப்பால் மிக எளிமையான தருணங்களையும் நித்தியத்துவத்தின் சுழற்சியினுள் பொருத்திவிடுகிறார்.
நம்பூதிரியின் கோட்டோவியங்கள், எம்.டி. வாசுதேவன் நாயர், எம்.என். விஜயன் ஆகியோரின் கட்டுரைகள், அபூர்வமான புகைப்படங்கள் ஆகியவை இந்தத் தொகுப்புக்கு அணி சேர்க்கின்றன.


