Your cart is empty.
துடிமேளக்காரன்
-சற்று முந்தியோ பிந்தியோ வந்தால் நாம் தவறவிட்டுவிடக்கூடிய குறுகிய தருணங்கள், உற்றுப் பார்த்தாலன்றி நமது ஊனக் கண்களுக்கு அவ்வளவாகப் புலப்படாத சிறிய மகத்துவங்கள், நெருங்கிப்போய் நின்றால் அல்லாமல் நெட்டுயிர்த்து நம்மால் சுவாசிக்கமுடியாத மிருதுவான நறுமணங்கள், குழந்தையின் மனம் கொண்டு திரிந்தால் மாத்திரமே தென்படும் திகைப்புகள் என நாம் எதிர்கொண்டு அவசரமாகக் கடந்திடும் அன்றாடத்தின் எளிய அனுபவங்களில் உள்ளுறைந்திருக்கும் அழகுகளையும் ஆழத்தையையும் அறுதியிட்டு, ‘இதோ இவ்வளவு பெறுமதிகளும் உங்களுக்கு உரிமையானவைதாம்!’ என நம்மிடம் உவக்கச் சொல்கின்றன இக் கவிதைகள். ஜானின் சுந்தரமான சொற்களில் இழைந்திருப்பது திகட்டச் செய்யும் இனிமை மட்டுமல்ல, இதழ்க்கடையில் இயல்பாக பூக்கும் நகையின் முடிவில் நம்மையறியாமல் விழிநுனியில் துளி நீர் கோர்த்து நிற்கும் அநாதரவான கணங்களும் அடங்கும். அந்தக் கரிப்புதான் இந்த கவிதைகளில் வெளிப்படும் வெகுளியான சிரிப்பை அழியாத ஒன்றாகவும் ஆக்குகிறது.
- க. மோகனரங்கன்











