Your cart is empty.
ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை
-கருங்கடற் கரையோரம் அமைந்துள்ள மனநல விடுதியில் ஒரு துரதிர்ஷ்ட நாளில் நிகழ்ந்த சம்பவத்தின் கதை இந்த நாவல். அந்தச் சம்பவமே முதலும் முடிவுமாக இருக்க, இடையில் நேர்ந்தவற்றை இந்நூல் விவரிக்கிறது. அந்த விவரிப்பில் எண்ணற்ற மனிதர்களும் கணக்கற்ற இடங்களும் ஏராளமான பொருட்களும் உட்படுகின்றன. அவை எல்லாமும் சேர்ந்து நாவலைப் பகடியும் திட்பமும் அவலமும் காவியத்தன்மையும் கொண்டதாக மாற்றுகின்றன.
தமிழில் வெளியாகும் அய்ஃபர் டுன்ஷின் முதல் நாவல் ‘ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை’. அவரது குறுநாவல் அஸீஸ் பே சம்பவம் காலச்சுவடு வெளியீடாக முன்னர் வெளிவந்துள்ளது.