Your cart is empty.
3200 கிலோமீற்றர் கதைகள்
எல்லாப் பயணங்களும் புதிய அனுபவங்களைத் தரக்கூடியவை. பயணம் தரும் அனுபவம் ஒருபுறம் இருக்க, பயணமே ஓர் அலாதியான அனுபவம்தான். எழுத்தாளர் சஞ்சயன் புதிய அனுபவங்களைப் பெறுவதற்காகவே பயணம் - அதுவும் நடைபயணம் - மேற்கொண்டார். 3200 கிலோமீட்டர்களுக்கும் மேல் நீண்ட நடைபயணங்களின்போது தான் கேட்ட கதைகளை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். வலி, வேதனை, கருணை, அன்பு எனப் பல உணர்வுகளை உள்ளடக்கிய கதைகள் இவை. இந்தப் பயணங்கள் தன்னைத் தனக்கே புரியவைத்திருக்கின்றன என்கிறார் சஞ்சயன். அவரது பயணத்தில் கிடைத்த இந்த அனுபவக் கதைகள் வாசகர்களுக்குப் புதிய அனுபவங்களையும் வாழ்க்கைத் தரிசனங்களையும் தரக்கூடியவை.











