Your cart is empty.
தன்னிகரற்ற தனிலயம்
-ஓர் எழுத்தாளராக, திரைத்துறை சார்ந்தவராக, புகழ்மிக்க ஆவணப்படத் தயாரிப்பாளராக, மொழிபெயர்ப்பாளராகச் சிறந்து விளங்கும் அம்ஷன் குமார், ‘அக்கரைச்சீமை’யிலிருந்து, இலங்கையின் கலை, இலக்கிய முயற்சிகளை எவ்வாறு மதிப்பிடுகிறார் என்பது நம் அக்கறைக்குரிய ஒன்றே!
‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சித்தம் படைத்த அம்ஷன் குமார், தொழில் நேர்மையைப் பேணுவதில் ஒருபோதும் பின்நின்றவர் இல்லை. முற்கற்பிதங்கள் எதுவுமின்றி, தீட்சண்யமாகவும் கூர்மை யாகவும் எதனையும் அணுகவல்ல இவருடைய பார்வை ஈழத்துக் கலை இலக்கியம் பற்றிய நிதானமான மதிப்பீட்டை முன்வைக்கிறது.
ஈழத்தின் கலை, இலக்கியம், நாடகம், திரைப்படம், ஆளுமைகள் பற்றிய குறுக்குவெட்டுமுகத் தோற்றத்தைக் காட்டும் சீரிய நூல் இது.
பேராசிரியர் மு. நித்தியானந்தன்
அணிந்துரையிலிருந்து. . .











