-புத்தாயிரத்தின் தொடக்கம், தமிழர்களின் மீதான இன அழிப்புப் போர் தீவிரம் பெற்ற தருணம். பத்து ஆண்டுகளுக்குள் அந்தப் பணியை முடித்துவிட்டது. இலங்கை ராணுவம். பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்னும் பெயரால் பல்லாயிரம் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பயங்கரமான நினைவுச் சின்னமாக உலக வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது. ஓருபுறம் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக சிங்களப் பேரினவாத அரசு முரசு கொட்டுகிறது. மற்றொருபுறம் போர்க் குற்ற அறிக்கைகள், விசாரணைகள். மாறிவிட்ட உலக நிலைமைகளைப் புரிந்துகொள்வது நம்முன்னிருக்கும் பெரும் சவால். அந்தச் சவாலை எதிர்கொள்ளும் முயற்சியே இந்நூல்.