Your cart is empty.
26 Feb 2025
சிவாலய ஓட்டம் நூலைப் பற்றி சித்ரா பாலசுப்பிரமணியன்
அ.கா. பெருமாள் அவர்களின் அபார உழைப்பு இப்புத்தகம்.
சிவராத்திரி அன்று பக்தர்கள் 108 கி.மீ தொலைவு நடந்து சென்று பன்னிரெண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வு சிவாலய ஓட்டம் எனப்படுகிறது. கன்யாகுமரி மாவட்டத்திற்கே உரிய சிறப்பான யாத்திரை நிகழ்வு இது.
முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன் மனை, திருப்பன்னிப்பாக்கம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்காடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக் கோடு, நட்டாலம் கோயில் ஆகியன அப்பன்னிரெண்டு கோயில்கள்.
கோயில்கள் குறித்த செய்திகள், கல்வெட்டு செப்பேடு செய்திகள், வாய்மொழி வரலாற்றுத் தகவல்கள், புகைப்படங்கள் என முக்கியமான தரவுகளை அ.கா. பெருமாள் தொகுத்துத் தந்திருக்கிறார்.
தமிழில் வந்துள்ள முக்கியமான கலாச்சார ஆவணம் இப்புத்தகம்.