Your cart is empty.
30 Oct 2025
நாவல் விமர்சனம்
“இந்நாவலின் சிறப்பு என்பது யதார்த்தமான ஏராளமான கதாபாத்திரங்கள். பேச்சிக்கிழவி ஒரு குறிசொல்லிபோல வரவிருக்கும் காலத்தைப் பற்றிய அச்சத்துடன் சுந்தரத்தின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிறாள். ஒரு சாலை, சாலையோரமிருக்கும் ஒரு பாத்திரக்கடையின் பாத்திரங்களில் எல்லாம் விதவிதமாகத் தெரிவதுபோல ஒரே சமூகநிகழ்வு நாகேந்திரன், சுமதி, விஜயா என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒவ்வொரு வகையாக நிகழ்வதை நுணுக்கமாகவும் சில இடங்களில் உணர்ச்சிமோதல்கள் வழியாகவும் அவ்வப்போது அதீத நிகழ்வுகள் வழியாகவும் குலசேகரன் சொல்லிச் செல்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு அத்தியாயத்தின் மையமாக ஆகிறது. நாமே ஒரு கிராமத்தில் மெய்யாக வாழ்ந்து அத்தனைபேரையும் சந்தித்து அவர்களிடம் கதைகேட்டு வந்ததுபோன்ற உணர்வை இந்நாவல் உருவாக்குகிறது.”
- எம். பாஸ்கர்
நன்றி: https://www.jeyamohan.in/224397/