Your cart is empty.
திபுலான் வாராதி
-திபுலான் வாராதி கதையைக் கேட்பவர்களும் சொல்பவர்களும்
அன்பின் தோகை விரித்து வானில் பறப்பார்கள். விண்மீன்கள்
சொல்லும் ரகசியங்களைப் பூமிக்குக் கொண்டுவருவார்கள்.
சாருவி இசைக் குறிப்பு
-திபுலான் வாராதி கதையைக் கேட்பவர்களும் சொல்பவர்களும்
அன்பின் தோகை விரித்து வானில் பறப்பார மேலும்
-மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாகத் தமிழில்
மொழிபெயர் மேலும்
-வன்முறை இன்றி மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த திராவிடக் கட்சிகளின்
செயல்பாடுகள் பற் மேலும்
-திபுலான் வாராதி கதையைக் கேட்பவர்களும் சொல்பவர்களும்
அன்பின் தோகை விரித்து வானில் பறப்பார்கள். விண்மீன்கள்
சொல்லும் ரகசியங்களைப் பூமிக்குக் கொண்டுவருவார்கள்.
சாருவி இசைக் குறிப்பு
-மஹ்மூத் தர்வீஷ் அரபு மொழியில் எழுதிய கவிதைகளை ஜாகிர் ஹுசைன் நேரடியாகத் தமிழில்
மொழிபெயர்த்திருக்கிறார்.
ஜாகிர் ஹுசைன் மூலக் கவிதையின் உணர்வோட்டத்தை, அதன் வீச்சைச் சிறப்பாகத் தமிழில்
கொண்டுவந்திருக்கிறார். நவீன அரபு இலக்கியம் இவர் மூலம் தமிழுக்கு நேரடியாக
அறிமுகமாகிறது. மதச்சார்பற்ற நவீன அரபு இலக்கியம் அரபு மூலத்திலிருந்து நேரடியாகத்
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது மிகக் குறைவு. இப்பின்னணியில் இத்தொகுப்பு
முக்கியமாகிறது.
-வன்முறை இன்றி மாபெரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த திராவிடக் கட்சிகளின்
செயல்பாடுகள் பற்றிய விரிவான முதல் ஆய்வு இது. மத மறுப்பில் தொடங்கி மதச்
சகிப்புத்தன்மைவரை திராவிட அரசியல் பெற்றுவந்த மாற்றங்களையும் நூலாசிரியர் பதிவு
செய்கிறார்.
தேர்தல் புள்ளிவிவரங்கள், செய்தித்தாள்கள், கட்சிகளின் துண்டுப் பிரசுரங்கள், திரைப்படங்கள்,
அரசியல்வாதிகளுடனான நேர்காணல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த நூல்,
இனம் சார்ந்து மக்களை அணிதிரட்டுகையில் சகிப்புத் தன்மையையும் ஜனநாயக உணர்வையும்
கட்சித் தலைவர்களும் குடிமக்களும் எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதையும் காட்டுகிறது.
திராவிட இயக்கங்களின் கோட்பாடுகளையும் வெகுசன அரசியலையும் அவற்றின் பன்முகப்
பரிமாணங்களுடன் புரிந்துகொள்வதற்கு உதவும் நூல் இது. அபாரமான வாதங்களும்
அபரிமிதமான ஆதாரங்களும் கொண்ட இந்த நூல் அரசியல் ஆர்வலர்களுக்கும்
ஆய்வாளர்களுக்கும் பலனளிக்கக் கூடியது.
வெகுமக்களியத்தின் உலகளாவிய ஆற்றலைப் புரிந்துகொள்வதற்கான அணுகுமுறையை
நரேந்திர சுப்பிரமணியன் முன்வைக்கிறார். வெகு மக்களியம் குறித்த உலக அளவிலான
ஒப்பாய்வில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள முக்கியத்துவத்தை இது தெளிவுறக்
காட்டுகிறது.
டேவிட் லட்டன், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர்
-பிரேம் எழுதிய இந்தக்கதைகள்
தனி மனிதர்களுக்குள்ளிருக்கும்
-மலைகளின் பேரரசியாய் வீற்றிருக்கும் மாஞ்சோலைப் பகுதியின்
வரலாற்றை, இயற்கையை, நூறு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டிருக்கும்
மாற்றங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் நூல் இது.
மாஞ்சோலைப் பகுதியில் பிறந்து வளர்ந்த அரசு அமல்ராஜ் தன்னுடைய
ஊரைப் பற்றி மண்ணின் வாசத்தோடும் மழையின் தூறலோடும்
பேசுகிறார்.
மாஞ்சோலையின் வரலாறு, சூழ்நிலை, மக்கள், வாழ்வியல் ஆகியவை
குறித்த முதல் பதிவு இந்த நூல்.
-ராமாயணம் ஒரே வடிவம் உடைய கதை அல்ல. உலகில் எத்தனையோ ராமாயணங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் ராமாயண வடிவங்கள் உள்ளன. செவ்வியல் மரபில் மட்டுமின்றி நாட்டார் மரபிலும் ராமாயணங்கள் உள்ளன. இத்தகைய பலவிதமான ராமாயணங்களில் ஒன்றுதான் அத்யாத்ம ராமாயணம். ராமனின் கதையைப் பரமசிவன் பார்வதிக்குக் கூறும் வடிவில் அமைந்ததே அத்யாத்ம ராமாயணம். இது வைணவ சம்பிரதாயத்தின் அடிப்படையில் அமைந்தது. இந்த ராமாயணத்தில் ராமன் மனிதப் பிறவி எடுத்தாலும் அவன் தெய்வப் பிறவி என்பதை அவனைச் சுற்றிலும் உள்ளவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அத்யாத்ம ராமாயணத்தின் சுருக்கமான உரைநடை வடிவம்தான் இந்த நூல். நாட்டார் வழக்காற்றியல், பண்டைய இலக்கியங்கள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தகுந்த ஆய்வாளரான அ.கா. பெருமாள் இந்தநூலை எழுதியுள்ளார். ராமாயணத்தை மிகச் சுருக்கமாக இன்றைய தலைமுறையினருக்கு வழங்கும் இந்த நூல் ராமாயணத்தில் பொதுவாக அறியப்படாத பல கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது.
-வெவ்வேறு காலங்களில் தான் எழுதிய ஒரு நாவலின் பகுதிகளை மீண்டும்
ஒருங்கிணைத்து முழுமைப்படுத்தியிருக்கிறார் சாந்தன். இந்தப் பகுதிகள் தன் மண்ணை விட்டகலாத ஒரு மனிதரின் தொடர்கதைகளாக
அமைந்திருப்பதால் இந்த மறு வடிவமைப்பு சாத்தியமாகியிருக்கிறது.
தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தம் சொந்த
அனுபவங்களினூடாக வெளிப்படுத்தும் –ஆசிரியர் சமநிலை வழுவாமல்
அதைச் செய்திருக்கிறார்.
ஒடுக்குமுறைகளால் வடிவமைக்கப்பட்ட ஈழத் தமிழ் வாழ்வின் அரை
நூற்றாண்டுக் கால அற்புதச் சித்தரிப்புகளை இந்தப் பிரதியில் காணலாம்.
சாந்தனின் பார்வை கூர்மையான அவதானிப்புகளைக் கொண்டிருந்தாலும்
தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளை இயல்பாகவே தவிர்த்துவிடுகிறது.
எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் தரப்பில் நின்று அணுகுவது இவர்
கதைகளின் தனித்தன்மை
-தமிழ் சமஸ்கிருத செவ்வியல் உறவு மிகத் தொன்மையானது. இவ்விரு மொழிகளின் உறவு மொழிப் பண்பாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டதன்று. சுமார் மூவாயிரம் ஆண்டுப் பெருவெளியில்
இரு செவ்வியல் மொழிகளின் சமூக, மொழி, அரசியல் தளங்களில் நிகழ்ந்துள்ள உரையாடல்கள் இன்றும் தொடர்கின்றன. இந்நிலையில் வரலாற்று உணர்வோடு சமகாலச் சமூக அரசியல் பண்பாட்டுச் சூழல்களின் பின்னணியில் இவ்விரு மொழிகளின் உறவைக் காண்பது நூலின் நோக்கம். இப்பொருண்மை குறித்து பல்வேறு அறிஞர்கள் எழுதிய 36 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன
-1987ஆம் ஆண்டு கேரளத்திலிருந்து பெங்களூருவுக்குச் சொந்த வேலையாக வந்த வழக்கறிஞர் அரசியல் வணிகப் போட்டியில் சிக்கித் தன் உயிரை இழந்தார். இரண்டு முறை பிணக்கூராய்வு செய்த பிறகும் காவல் துறை விசாரணை நடந்தும் அக்கொலையின் மர்மம் விலகவில்லை. காவல் துறை இதனைத் தற்கொலை என்று கூறி வழக்கை முடிக்க முனைந்தது. வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றது. புலனாய்வு செய்யும் பொறுப்பு குப்புசாமி ரகோத்தமன் என்னும் சி.பி.ஐ. அதிகாரிக்கு வழங்கப்பட்டது. மூன்று மாநிலங்கள், ஆயிரக்கணக்கான ஆவணங்கள், காவல் துறை, அரசியல்வாதிகள் ஆகியவற்றினூடே ரகோத்தமன் தன் தேடலை மேற்கொண்டார். அவருடைய புலனாய்வு காவல் துறை அதிகாரிகளையும் மாநிலத்தின் உள்துறை
அமைச்சரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அந்த வழக்கு என்ன ஆனது? குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? அதிகாரம் உண்மையை வென்றதா?
சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமனைச் சந்தித்து இந்த வழக்கின் விவரங்களைக் கேட்டறிந்த இதழியலாளர் வி. சுதர்சன் இக்கொலை வழக்கின் கதையை விறுவிறுப்பான நாவல்போலப் பதிவுசெய்திருக்கிறார். காவல் துறையின் போக்கு, அரசு அதிகாரம், சி.பி.ஐ.யின் செயல்பாடு ஆகியவற்றைத் துல்லியமாக விவரிக்கும் இந்த நூல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரான போராட்டத்தை விளக்குகிறது. அதிகார மட்டங்களில் உண்மைக்கு என்ன மதிப்பு என்பதையும் காட்டுகிறது.
-போரின் நிமித்தம் புலம்பெயர்ந்து அகதியாகப் பல நாடுகள் கடந்து கடைசியில் கனடாவில் தஞ்சமடையும் பத்தொன்பதே வயதான நிஷாந் எனும் இளைஞனின் பார்வையில் விரியும் இந்நாவல் உலகெங்கிலும் அலைவுறும் மனிதர்களின் வாழ்க்கையைக் கழிவிரக்கமற்ற மெல்லிய நகையுணர்வுடன், தீவிரத்துடன் முன்வைக்கிறது.
சந்திரா மாமி, சகுந்தலா, ஈஸ்வரி, அம்பிகாபதி, அகல்யா என ஒவ்வொருவராக நிஷாந்தின் மன அறைக்குள் வந்து தங்கி அவரவர் கதைகளைக் கூறி மறைகின்றனர். எவ்வளவு துயரிலும் நிஷாந்துக்குக் காதலிக்கிற மனநிலை வாய்க்கிறது. நாவலெங்கும் கடவுச்சீட்டு ஒரு கதாபாத்திரமாகவே சுற்றிச் சுழல்கிறது.
அ.முத்துலிங்கம் என்கிற மகத்தான கதைசொல்லியின் மொழி லாவகத்தால் புலம்பெயர் நாவல்களின் வழக்கமான பாணியை உதறிவிட்டு இது வேறொரு ரூபம் கொள்கிறது.
-ராமன் வனவாசம் போகையில் எந்த வழியாகப் போயிருப்பான்? வால்மீகி ராமாயணம் நமக்கு ஓரளவு சரியான இட வர்ணனையைத் தருகிறது. ஆனால் இன்றைய வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ராமன் சென்ற பாதை எது என்பதில் உறுதியும் ஒருமித்த கருத்தும் இல்லை.
-பழங்குறியீடுகள் கலைக்களஞ்சியம் என்ற இந்த நூலில் கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகளிலிருந்து எடுக்கப்பட்ட 1127 குறியீடுகள் உள்ளன. ஒரு சொல்லுக்குப் பல்வேறு குறியீடுகள் இருப்பதையும் இந்த நூல் சுட்டுகிறது. ஒவ்வொரு குறியீட்டுக்கும் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆய்வுரையும் மூன்று மொழிகளில் தரப்பட்டுள்ளது. இந்நூலில் அளவைக் குறியிடுகள், அளவை அல்லாத குறியீடுகள், அளவை வாய்ப்பாடுகள், கூட்டெழுத்து வடிவங்கள், நிலஅளவை வாய்ப்பாட்டுக் குறியீடுகள் ஆகியன உள்ளன. தமிழ்மொழியில் குறியீடுகள் பற்றி தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கணத்தில் காண முடியும். வேறு சில நூல்களும் உள்ளன. சா. கணேசன் போன்ற சிலரின் கட்டுரைகளும் காணப்படுகின்றன. ஆனால், குறியீடுகளைப் பற்றிய விரிவான தொகுப்புக் களஞ்சியம் என்பது இந்த நூலின் சிறப்பு. நூலாசிரியரின் கடின உழைப்பு இந்த நூலுக்குப் பெருமை சேர்க்கிறது.