-நந்தினி துடியான பெண். ஆனால் கல்வி, வேலை, குடும்பம் பற்றிய அவள் எதிர்காலக் கனவுகளோ ஒவ்வொன்றாகத் தகர்ந்துபோகின்றன. என்றாலும் அவள் துவண்டுபோகவில்லை. ஒவ்வொரு முறை வீழும்போதும் நம்பிக்கையோடு மீண்டெழுகிறாள். தானும் தன் குழந்தைகளும் வாழ்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அவளைச் சாதனையாளராக்குகின்றன. தன்னம்பிக்கை, சுயசார்பு, விடாமுயற்சி, கடமையுணர்வு இவை இருக்குமானால் எந்தத் தடையையும் தாண்டிச் செல்ல முடியும் என்பதை நந்தினியின் கதை வாயிலாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.