Your cart is empty.
மூன்று நாடகங்கள்
சுந்தர ராமசாமி எழுதி, ஏற்கெனவே இதழ்களில் வெளிவந்த ‘உடல்’, ‘யந்திரத் துடைப்பான்’ நாடகங்களும் இதுவரை பிரசுரமாகாத ‘டாக்டர் நாகராஜன்’ நாடகமும் முதன்முதலாக நூல் வடிவம் பெறுகின்றன. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல நிலைகளிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ள சுந்தர ராமசாமியின் ஆளுமை நாடகங்களிலும் செயல்பட்டுள்ளதை இத்தொகுப்பு உணர்த்தும். நாடகம் குறித்து சுந்தர ராமசாமி எழுதிய இரண்டு கட்டுரைகளும் இந்நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.