Your cart is empty.
ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை
-மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சுகுமாரன் | ஷாலினி பிரியதர்ஷினி |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் | மொழிபெயர்ப்பு நாவல் |
-கருங்கடற் கரையோரம் அமைந்துள்ள மனநல விடுதியில் ஒரு துரதிர்ஷ்ட நாளில் நிகழ்ந்த சம்பவத்தின் கதை இந்த நாவல். அந்தச் சம்பவமே முதலும் முடிவுமாக இருக்க, இடையில் நேர்ந்தவற்றை இந்நூல் விவரிக்கிறது. அந்த விவரிப்பில் எண்ணற்ற மனிதர்களும் கணக்கற்ற இடங்களும் ஏராளமான பொருட்களும் உட்படுகின்றன. அவை எல்லாமும் சேர்ந்து நாவலைப் பகடியும் திட்பமும் அவலமும் காவியத்தன்மையும் கொண்டதாக மாற்றுகின்றன.
தமிழில் வெளியாகும் அய்ஃபர் டுன்ஷின் முதல் நாவல் ‘ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை’. அவரது குறுநாவல் அஸீஸ் பே சம்பவம் காலச்சுவடு வெளியீடாக முன்னர் வெளிவந்துள்ளது.
ISBN : 9789361107276
SIZE : 14.0 X 2.5 X 21.0 cm
WEIGHT : 420.0 grams
தமிழ்நதி
18 Feb 2026
அய்ஃபர் டுன்ஷின் ‘'ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை' நாவல்
மதிப்புரை
…துருக்கியின் வடபகுதியில் கருங்கடலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கும் மனநல விடுதியில், ஒரு நாட் பொழுதில் (பெப்ரவரி 14) நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டே நாவல் நகர்த்தப்படுகிறது என்றபோதிலும், மனநல விடுதிக்குள் நாவல் நிற்பதில்லை. அதற்கப்பாலும் சென்று அந்த மருத்துவமனையின் பணியாளர்கள்-நோயாளிகளது பின்னணி, அவர்கள் அவ்விடத்தை வந்தடைந்ததற்கான காரணங்கள், உணர்வுகள், துருக்கியின் வரலாறு என அலைந்து திரிந்துவிட்டு இறுதியில் மறுபடியும் தொடங்கிய இடத்திற்கே வந்துசேர்கிறது. மனநல விடுதி என்றவுடன் இருண்ட தன்மை கொண்ட நாவலென எண்ணிவிடத் தேவையில்லை. வரலாற்றையும் கதாபாத்திரங்களையும் தன்னுடைய கறுப்பு நகைச்சுவை மூலம் வாரிவிடுகிறார் நாவலாசிரியர் அய்ஃபர் டுன்ஷ்…
…வியப்பு என்னவென்றால், அய்ஃபர் டுன்ஷால் இத்தனை குழப்பகரமான இழைகளை, சம்பவங்களை ஞாபகத்தில் வைத்திருந்து எங்ஙனம் தொடுக்கமுடிந்தது என்பதே. முடிக்காமல் விட்டு அந்தரத்தில் தொங்கிய இழை என ஏதுமிராது என நம்பலாம்…
நன்றி: தமிழ்நதி (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/727685833/posts/10161682158040834/?rdid=Sbs58nhT3bmhtwsi#
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ஒரு மனநல விடுதியின் மிகவும் நம்பத் தகாத வரலாற்று அறிக்கை (இ-புத்தகம்)
கருங்கடற் கரையோரம் அமைந்துள்ள மனநல விடுதியில் ஒரு துரதிர்ஷ்ட நாளில் நிகழ்ந்த சம்பவத்தின் கதை இந்த மேலும்

