Your cart is empty.
-அரவிந்தனின் சிறுகதைகள் அன்றாட வாழ்க்கையின் சட்டகத்திற்குள் இயங்குபவை; நேரடியானவை. அந்தச் சட்டகத்திற்குள் அதிகம் கவனம் கொள்ளாத தருணங்களை, நிகழ்வு களைப் பேசுகின்றன. இருவேறு மனநிலைகளின் கதைகள் என்று இவர் கதைகளைச் சொல்லலாம்.
அன்றாட வாழ்க்கை நகரும் படிக்கட்டுகள் போன்றது. அதன் சீரான இயக்கம் தடைபடாதவரை யாவும் எளிதே. திடீரெனப் படிக்கட்டுகள் பாதியில் நின்றுவிடும்போது இரும்புப் படிகளில் ஏறிக் கடப்பது சிரமமானது. அதுபோன்ற தருணங்களையே அரவிந்தன் கதையாக்குகிறார்.
அரவிந்தனின் கதாபாத்திரங்கள் தங்கள் சூழ்நிலைகளுடனும் உணர்ச்சிகளுடனும் போராடுகிறார்கள். அவர்கள் வசிக்கும் நகரம் திடீரென நிறையக் கைகள் கொண்ட ஆக்டோபஸ் போலாகி அவர்களைத் திணறடிக்கிறது. அவரது ஒவ்வொரு சிறுகதையின் முடிவும் இன்னொரு புதிய கதைக்கான துவக்கம்போலவே இருக்கிறது. இந்தத் தொகுப்பில் பத்து வித்தியாசமான கதைகள் உள்ளன. அவை தனித்துவமான அனுபவத்தை உருவாக்குகின்றன.
எஸ். ராமகிருஷ்ணன்
ISBN : 9789361104480
SIZE : 13.5 X 0.5 X 21.0 cm
WEIGHT : 180.0 grams
திவ்யா தைலியண்ணன்
14 Oct 2025
Saravanan Manickavasagam
27 Sep 2025
பால்நிலவன் (தி இந்து நாளிதழ்)
3 Jan 2026
அரவிந்தனின் ‘புதைமணல்’ சிறுகதைகள் நூல் அறிமுகம்
‘மாநகர வாழ்வின் பிரதியட்ச மனவெளி’
…அடுக்கக வாழ்க்கையை விவரிக்கிறது ‘புதைமணல்’. மாடியில் துணி காயப் போடுவதில் மற்றவர் இடத்தை ஆக்கிரமித்து அடுக்ககத்தின் விதிமுறைகளை மீறும் ஒரு பெண் பெரிய இடங்களில் செல்வாக்கு மிக்கவள். அங்கு வசிக்கும், சக்கரவர்த்தி என்ற பத்திரிகையாளன் நியாயம் கேட்கிறான். அது சட்ட சிக்கலை ஏற்படுத்திவிட விசாரணைக்காக காவல் நிலையம்வரை அழைத்துச் செல்லப்படுகிறான். காவல்துறை, நீதிமன்றம் என்றெல்லாம் எக்கச்சக்கமாகிவிட, சாமானியனின் நிலை எவ்வளவு சிக்கலாகிறது என்பதை வலியோடு பேசுகிறது இக்கதை…
நன்றி: பால்நிலவன் (தி இந்து நாளிதழ்)
முழுப்பதிவையும் பார்க்க:
https://www.hindutamil.in/news/literature/puthaimanal-book-review-in-tamil














