Your cart is empty.


நாயனம்
ஆ. மாதவனின் சிறுகதைகள் எதார்த்தவாதப் பிரிவைச் சார்ந்தவை. அன்றாட வாழ்வில் நமது பார்வைக்குத் தட்டுப்படும் மனிதர்களும் நிகழ்ச்சிகளுமே அவரது புனைவுலகிலும் இடம்பெறுகின்றன. அவை நமக்குச் சாதாரண மனித … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: சுகுமாரன் |
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | தமிழ் கிளாசிக் சிறுகதை |
ஆ. மாதவனின் சிறுகதைகள் எதார்த்தவாதப் பிரிவைச் சார்ந்தவை. அன்றாட வாழ்வில் நமது பார்வைக்குத் தட்டுப்படும் மனிதர்களும் நிகழ்ச்சிகளுமே அவரது புனைவுலகிலும் இடம்பெறுகின்றன. அவை நமக்குச் சாதாரண மனித நடவடிக்கைகளாக மட்டுமே பார்வையில் பட்டுக் கலைந்து போகின்றன. நமது பார்வைக்கு அகப்படாத அந்த உலகின் இயக்கத்தை மையமாகக் கொண்டது மாதவனின் கலைப்பார்வை. அந்த செயல்களில் காணப் படும் நன்மையும் தீமையும் அந்த மனிதர்களின் இயல்பு என்று எந்த மிகையும் சார்பும் இல்லாமல் சித்தரிக்கப்படுகின்றன. குற்றமும் காமமும் பழி வாங்கலும் இயல்பான மனித குணங்களாகவே முன்வைக்கப் படுகின்றன. அவை பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துகளை அவர்கள் மீது சுமத்திப் பார்க்க அனுமதிக்காத வகையிலேயே அந்தச் சித்தரிப்புகள் அமைகின்றன.
ஆ. மாதவன்
ஆ. மாதவன் (1934) திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆ. மாதவன். பெற்றோர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம்மாள், ஆவுடைநாயகம். பள்ளி இறுதி வகுப்புவரையில் மலையாளக் கல்வி கற்ற மாதவனுக்கு மலையாள இலக்கியப் பரிச்சயம் தந்த வேகம், தமிழ்ப் படைப் புலகின் புதுமைப்பித்தன், க.நா.சு., லா.ச.ரா., தி. ஜானகிராமன், ந. பிச்சமூர்த்தி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்றெல்லாம் பரிச்சயம் கொள்ள வைத்தது. மலையாளம் கலந்த தமிழ் பேசும் திருவனந்தபுரத்துச் சாலை கடைத் தெரு வட்டாரமும், அதன் மக்களும் வியாபார உலகில் வாழ்வு நடத்தும் மாதவனுக்கு இலக்கியப் படைப்புச் சக்தியாக அமைந்தனர். 1974இல் வெளிவந்த ‘புனலும் மணலும்’ முதல் நாவல். தொடர்ந்து வெளிவந்த ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் போன்றவை திருவனந்த புரத்துத் தமிழ் வாழ்வுச் சலனங்களின் பிரதிபலிப்புச் சித்திரங்களாயின. ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற திறனாய்வு நூலுக்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றுள்ளார். தொடர்பு முகவரி: A. Madhavan M.R.A. 35 Ottukkal Street Kaithamukku Thiruvananthapuram 695 028
ISBN : 9789352440351
SIZE : 13.9 X 1.0 X 21.5 cm
WEIGHT : 244.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்
இரண்டு உலகங்கள்
வலிமையான சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆன்ம பலத்தை வழங்குகின்றன வண்ணநிலவனின் கதைகள். நம்மைச் சோதிக்க மேலும்
சிறகு முளைத்த பெண்
சமூகம், மதம், அரசியல், நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எ மேலும்
எழுதித் தீராப் பக்கங்கள்
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும்
நூல்கள் நூலகங்கள் நூலகர்கள்
அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நட மேலும்
கலாச்சாரக் கவனிப்புகள்
யாழ்ப்பாணக் கச்சேரியடியில் ‘இவ்விடத்தில் துப்பாதீர்கள்’ என்று அறிவிப்பு எழுதிவைத்தால் ‘எந்த மானமு மேலும்
சமூகவியலும் இலக்கியமும்
பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் மேலும்
சில ஆசிரியர்கள் சில நூல்கள்
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும்
படைப்புக்கலை
அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல். உணர்ச்சிகளை அதிகம மேலும்
மெட்ராஸ் 1726
காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும்
இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும்
தருநிழல்
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிர மேலும்