Your cart is empty.
சிறிய இறகுகளின் திசைகள்
எல்லாவிதத் தேடல்களுக்கும் பிறகான பூரண அமைதியில் மனங்கடத்தும் தனித்த சந்தோஷத்தின் மிருது லயத்தையும், அதன் தீவிரத்தன்மையின் அழகியலையும் எல்லாவழிகளிலும் கைவிடப்பட்டிருக்கும் உணர்வுகளினாலான வலிகளையும் அடிப்படையாகக் கொண்டிருப்பவை இச்சொற்கள். மேலும் அம்மனதிற்கு மிகநெருக்கமான உலகமொன்றையும் அதன் பற்றற்றத் தன்மைகளின் எண்ணற்ற சாத்தியப்பாடுகளையும் ஒரு ஆழத்தில் இவை மறைத்தும் வைத்திருக்கின்றன. வாழ்வின் ஆகச் சிறந்தவற்றின் ஒளியை சிறு புதிர்களாகச் சொற்களில் கொண்டிருப்பவை இந்நூலின் கவிதைகள்.











