Your cart is empty.

திரிதீப் சுஹ்ருத்
பிறப்பு: டிசம்பர் 19, 1965
திரிதீப் சுஹ்ருத் நவீன குஜராத்தின் அறிவுபுலம் மற்றும் பண்பாட்டு வரலாற்றையும், காந்திய அறிவுபுலத்தின் தொடர்ச்சியையும் ஆய்வு செய்யும் ஆய்வாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
அகமதாபாத் சபர்மதி ஆசிரம பாதுகாப்பு மற்றும் நினைவு அறக்கட்டளையின் (2012-17) இயக்குனராக ‘காந்தி ஹெரிடேஜ் போர்ட்டல்’ எனும் காந்தியின் மொத்த எழுத்துக்களை தொகுக்கும் இணையக் கருவூலத்தை உருவாக்கியதில் அவருடைய பங்கு முதன்மையானது. அத்தளத்தின் முதன்மை ஆசிரியரும் அவரே. காந்தியின் வாழ்வைப் பற்றி பல புத்தகங்களை எழுதியதோடு நில்லாமல், திரிதீப் சுஹ்ருத் ‘இந்து சுயராஜ்ஜியத்தின்’ உரையுடன் கூடிய ஆய்வுப் பதிப்பில் இணையாசிரியராக பணியாற்றினார். நாராயண தேசாயின் ‘என் வாழ்வே என் செய்தி’ எனும் நான்கு தொகுதிகள் கொண்ட காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலையும், ‘சரஸ்வதிசந்திரா’ எனும் நான்கு தொகுதிகள் கொண்ட குஜராத்தி பெருநாவலையும் மொழியாக்கம் செய்துள்ளார்.
தற்போது திரிதீப் சுஹ்ருத் 1942-48 காலகட்டத்தைச் சேர்ந்த மனு காந்தியின் நாட்குறிப்பை மொழியாக்கம் செய்து வருகிறார். இதுவரை அச்சில் வராத காந்திக்கு எழுதப்பட்ட கடிதங்களை தொகுத்து வருகிறார். சம்பரான் அவுரி விவசாயிகளின் சாட்சியங்களை எட்டு தொகுதிகள் கொண்ட நூலாக தொகுத்து வருகிறார். அகமதாபாத் CEPT பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் கருவூலத்தின் இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.
அகமதாபாத் சபர்மதி ஆசிரம பாதுகாப்பு மற்றும் நினைவு அறக்கட்டளையின் (2012-17) இயக்குனராக ‘காந்தி ஹெரிடேஜ் போர்ட்டல்’ எனும் காந்தியின் மொத்த எழுத்துக்களை தொகுக்கும் இணையக் கருவூலத்தை உருவாக்கியதில் அவருடைய பங்கு முதன்மையானது. அத்தளத்தின் முதன்மை ஆசிரியரும் அவரே. காந்தியின் வாழ்வைப் பற்றி பல புத்தகங்களை எழுதியதோடு நில்லாமல், திரிதீப் சுஹ்ருத் ‘இந்து சுயராஜ்ஜியத்தின்’ உரையுடன் கூடிய ஆய்வுப் பதிப்பில் இணையாசிரியராக பணியாற்றினார். நாராயண தேசாயின் ‘என் வாழ்வே என் செய்தி’ எனும் நான்கு தொகுதிகள் கொண்ட காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலையும், ‘சரஸ்வதிசந்திரா’ எனும் நான்கு தொகுதிகள் கொண்ட குஜராத்தி பெருநாவலையும் மொழியாக்கம் செய்துள்ளார்.
தற்போது திரிதீப் சுஹ்ருத் 1942-48 காலகட்டத்தைச் சேர்ந்த மனு காந்தியின் நாட்குறிப்பை மொழியாக்கம் செய்து வருகிறார். இதுவரை அச்சில் வராத காந்திக்கு எழுதப்பட்ட கடிதங்களை தொகுத்து வருகிறார். சம்பரான் அவுரி விவசாயிகளின் சாட்சியங்களை எட்டு தொகுதிகள் கொண்ட நூலாக தொகுத்து வருகிறார். அகமதாபாத் CEPT பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் கருவூலத்தின் இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.
|