Your cart is empty.
பெருந்தேவி
பெருந்தேவி கவிஞர். அமெரிக்காவிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் தெற்காசிய மதங்கள், பண்பாட்டு மானுடவியல், இந்திய மருத்துவ வரலாறு, பெண்ணியம் ஆகிய துறைகளூடே ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்காவில் சியனா கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தன் துறைகள் சார்ந்து கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் வெளியிட்டிருக்கிறார். காலச்சுவடு, கல்குதிரை, மணல்வீடு, கூடு ஆய்விதழ் முதலிய தமிழ் இதழ்களிலும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. கவிதை தவிர மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு, நாடகம் ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருப்பவர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தேசம் சாதி சமயம் (இ-புத்தகம்)
-ஆண்பால், பெண்பால் என்னும் இருமையை மீளுருவாக்கம் செய்கின்ற பாலியல் அதிகாரம் தனித்த ஒன்றல்ல; சாதி, மேலும்
கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன?
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், மேலும்
உடல் - பால் - பொருள்
#Metoo இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கும் இந்தக் கட்டுரைகள் அந்த இயக்கத்தின் சமகாலச் சிக்கல்களுடன் ந மேலும்




