Your cart is empty.
புதுமைப்பித்தன்
பிறப்பு: 1906 - 1948
புதுமைப்பித்தன் (1906 - 1948) தமிழ்ச் சிறுகதையின் முதல்வராக மதிக்கப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். தந்தையார் வி. சொக்கலிங்கம் பிள்ளை, தாசில்தார். தாயார் பர்வதத்தம்மாள். 1931இல் புதுமைப்பித்தன் நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று கமலா (1917-1995)வைத் திருமணம் செய்து கொண்டார். முதல் படைப்பு ‘குலோப்ஜான் காதல்’ 1933இல் காந்தியில் வெளிவந்தது. தினமணியின் உதவி ஆசிரியராகவும் பின்னர் தினசரியிலும் பணியாற்றினார். 1946இல் திரைப்படத் துறையில் நுழைந்தார். 1948இல் காசநோயால், மகள் தினகரியின் இரண்டாவது வயதில், திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார். புதுமைப்பித்தனின் ஒரே வாரிசு திருமதி தினகரி சொக்கலிங்கம் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
புதுமைப்பித்தன் களஞ்சியம்(இ-புத்தகம்)
புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்திலிருந்து அவர் மறைவுக்கு அடுத்த இருபத்தைந்து முப்பது ஆண்டுகள்வரை அவ மேலும்
எப்போதும் முடிவிலே இன்பம்
நவீனத் தமிழின் ஊற்று முகங்களில் ஒன்று புதுமைப்பித்தன். தமிழ் உரைநடைக்குப் புதிய உயிரும் புனைகலைக் மேலும்
புதுமைப்பித்தன் கதைகள்
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெற மேலும்
புதுமைப்பித்தன் கட்டுரைகள்
இந்நூலில் புதுமைப்பித்தனின் கட்டுரைகள், மதிப்புரைகள், அதிகாரம் யாருக்கு?, பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சி மேலும்





