Your cart is empty.
5 Jan 2026
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’
மதிப்புரை
‘துயரை எதிர்கொள்ளும் பிரதி’
…முப்பத்துமூன்று ஆண்டுகள் அவர் உள்ளூற எதிர்பார்த்து பயந்த அத்தருணம் ஆகஸ்ட் 22, 2022 அன்று ஒரு கருத்தரங்க மேடையில் ஒரு கத்தியின் வடிவில், அதை ஏந்தியிருந்த ஒரு அடிப்படைவாத இளம் மூர்க்கனின் கரங்களின் மூலம் அவருக்கு வாய்த்தது… கொடூரமான அத்தாக்குதலில் இருந்து மிக மிக அதிர்ஷ்டவசமாக அவர், தனது இடது கண்ணைக் காவு கொடுத்து, உயிரை மீட்டுக் கொண்டார். இந்த அனுபவப் எழுத்தின் வழியாக ஒரு கொலை முயற்சிக்குப் பிறகான தனது சிந்தனைகளை, தனக்குள்ளாகவே தொகுத்து, நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்…
…இப்பிரதியை எழுதியதே அவரது தனிப்பட்ட வாழ்வில் துயர் கடத்தல் மற்றும் அதன் நீட்சியாக இயல்புக்கு மீளல் என்பதான செயல்பாடுதான். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஒரே நேரத்தில் இப்படைப்பு தனி மனிதனாக பாதிக்கபட்ட ஒருவரது பகிர்வாகவும், உலகெங்கிலும் அதிகாரத்தாலும் அடிப்படைவாதத்தாலும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிற எழுத்தாளர்களுக்கான ஆதரவுக் குரலாகவும் எழுகிறது…
…இந்த ஆண்டில் ரசித்து வாசித்த படைப்புகளில் ஒன்றாக ‘கத்தி’ இருக்கிறது.
நன்றி: வருணன் ஜோ (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/story.php?story_fbid=26719397507647690&id=100000124107141&rdid=9LbKfykAQDYVka4y#