Your cart is empty.
20 Jan 2026
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’
நூல் பரிந்துரை
‘மீண்டெழும் அனுபவத்தின் எழுத்துகள்’
…உலகம் முழுவதும் எழுத்தாளர்களும், அறிவு ஜீவிகளும் மத வெறி/சாதி வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். இந்த புத்தகத்தை வாசிக்கும் போதே எனக்கு நினைவில் வந்தது எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் தான்! அவருடைய மாதொருபாகன் படைப்புக்காக சாதி வெறியர்களால் அச்சுறுத்தப்பட்டார்.
மிகவும் சமீபத்திய உதாரணமாக நடந்த சில கொலைகளும் இருக்கின்றன. கர்நாடகத்தில் கௌரி லங்கேஷ் மற்றும் எம்.எம்.கல்புர்கி. புனேவைச் சேர்ந்த நரேந்திர தாபோல்கர் என பல எழுத்தாளர்கள் கொல்லப்பட்டார்கள். எந்த அளவிற்கு பகுத்தறிவிற்கும், முற்போக்கு சிந்தனைகளுக்கும் எதிரான மனப் போக்கு இருந்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி. இந்த சீழ் பிடித்த மனநிலையின் ஒரு துளியை இந்த புத்தகம் நமக்கு காட்டுகிறது!..
நன்றி: கேசவராஜ் ரங்கநாதன் (சோழராசு)
(முகநூல் பதிவிலிருந்து)
முழுக் காணொலிக்கு: