Your cart is empty.
நட்சத்திரவாசிகள்
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆறு, ஏழு இலக்க ஊதியத்தின் பின்னிருக்கும் வாழ்வின் அழுத்தங்கள், நிராகரிப்பின் வலிகள், அதன் வெம்மை ஆகியவையே இந்நாவலின் கருப்பொருள்.
கிராமத்திலிருந்தோ சிறுநகரமொன்றிலிருந்தோ திடீரென ஒரு தலைமுறை தகவல் தொழில்நுட்பத் துறைக்குள் சென்றதன் விளைவுகளை இந்நாவல் மையமிடுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறைக்குள் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணி செய்தவர்கள் புதியனவற்றின் வருகையால் கரைந்துபோவதையும் வாழ்வு அவர்களிடம் கரிசனம் கொள்ளாததையும் கலாபூர்வமாக இந்நாவல் முன்னிருத்துகிறது.
அந்த வாழ்வு சங்கிலியால் பிணைக்கப்பட்டதை அலசினாலும் நம்பிக்கையளிக்கும் மனிதர்களையும் நாவல் அடையாளம் காட்டுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையின் ஆடம்பரங்கள், ஒப்பனைகளுக்கு அப்பாலான உலகத்தை இந்நாவல் திறந்துவைத்திருக்கிறது.
இது கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் முதல் நாவல்.











