Your cart is empty.
யாரோ ஒருவனுக்காக
காதல், காமம், மரணம், கேளிக்கை, கடவுள் துரோகம், சுய இருப்பு ஆகியவை நவீன வாழ்வில் நிகழ்த்தும் பகடையாட்டங்கள் குறித்தான சிந்தனைகள், அவற்றிற்கு மனித மனம் அரங்கேற்றும் எதிர்வினைகள், இந்தச் சிந்தனைகளுக்கும் வினைகளுக்கும் இடையேயான ஊசலாட்டம் - இவையே வா.மணிகண்டனின் கவிதைகளின் சாரம். தன்னிடமிருந்து நுரைத்துப் பொங்கும் உணர்ச்சிகள் நசுக்கப்படுகின்ற கணத்தில் வெளியேற முயற்சிக்கும் நகர மனிதனின் சிதைக்கப்பட்ட குரல்வேற்றுமைகளாக இந்தக் கவிதைகள் உருக்கொள்கின்றன.











