Your cart is empty.
3200 கிலோமீற்றர் கதைகள்
₹130.00
மேலும்
எல்லாப் பயணங்களும் புதிய அனுபவங்களைத் தரக்கூடியவை. பயணம் தரும் அனுபவம் ஒருபுறம் இருக்க, பயணமே ஓர் அலாதியான அனுபவம்தான். எழுத்தாளர் சஞ்சயன் புதிய அனுபவங்களைப் பெறுவதற்காகவே பயணம் - அதுவும் நடைபயணம் - மேற்கொண்டார். 3200 கிலோமீட்டர்களுக்கும் மேல் நீண்ட நடைபயணங்களின்போது தான் கேட்ட கதைகளை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். வலி, வேதனை, கருணை, அன்பு எனப் பல உணர்வுகளை உள்ளடக்கிய கதைகள் இவை. இந்தப் பயணங்கள் தன்னைத் தனக்கே புரியவைத்திருக்கின்றன என்கிறார் சஞ்சயன். அவரது பயணத்தில் கிடைத்த இந்த அனுபவக் கதைகள் வாசகர்களுக்குப் புதிய அனுபவங்களையும் வாழ்க்கைத் தரிசனங்களையும் தரக்கூடியவை.
ISBN : 9789361103698
SIZE : 14.0 X 0.5 X 21.0 cm
WEIGHT : 120.0 grams
இளங்கோ டிசே
7 Feb 2026
சஞ்சயன் செல்வமாணிக்கத்தின் ‘3200 கிலோமீற்றர் கதைகள்’
நூல் பரிந்துரை
… டீ கொம்பொஸ்தெல்லா செல்வதற்கான இந்த புனித யாத்திரையை தமிழில் முதன்முதலாக பதிவு செய்தவர் சஞ்சயனாக இருக்க வேண்டும். மேலும் இந்த யாத்திரை பெரும்பாலானர்க்கு அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கையுடன் இருக்கும்போது சஞ்சயன் மதநம்பிக்கையற்றவராக தனது மீட்சிக்கான பயணமாக இந்த அனுபவங்களைப் பதிவு செய்திருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.
நன்றி: இளங்கோ டிசே (முகநூலிலிருந்து)













