Your cart is empty.
தாமோதரம் சி.வை.தா. பதிப்புரைகள் (இ-புத்தகம்)
-தமிழ்ப் பதிப்பியலின் தலைமகன் தாமோதரனார். கறையானுக்கும் தமிழரின் மெத்தனத்திற்கும் இரையாகி அழியவிருந்த பழந்தமிழ் நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்துக் காத்தது மட்டுமன்று சி.வை. தாமோதரம் பிள்ளையின் சாதனை. செம்மாந்த … மேலும்
-தமிழ்ப் பதிப்பியலின் தலைமகன் தாமோதரனார். கறையானுக்கும் தமிழரின் மெத்தனத்திற்கும் இரையாகி அழியவிருந்த பழந்தமிழ் நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்துக் காத்தது மட்டுமன்று சி.வை. தாமோதரம் பிள்ளையின் சாதனை. செம்மாந்த நடையில் இலக்கிய நயத்தோடு அவர் எழுதிய நீண்ட பதிப்புரைகளுக்கும் இலக்கிய வரலாற்றில் இடமுண்டு. புதிதாகக் கிடைத்துவந்த சான்றுகளின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வரலாற்றை வரைவதற்கான குறிப்புகளை அவர் முன்வைத்தார். சமகாலப் புலமை மரபோடு விவாத நோக்கில் அவர் தொடர்ந்த உரையாடல்கள், தமிழின் நவீனமயமாக்கத்தைப் புரிந்துகொள்ள வழிகோல்வதோடு வாசிப்புச்சுவையும் மிகுந்தவை. ‘தமிழ் மாது’ (தமிழன்னை), ‘பாஷாபிமானம்’ (மொழிப் பற்று), ‘தேசாபிமானம்’ (நாட்டுப் பற்று) ஆகிய தொடர்களை முதன்முதலில் கையாண்டவர் சி.வை. தாமோதரம் பிள்ளையே. ஒரு நாவலுக்குக் கருப்பொருளாக அமையக்கூடிய அளவுக்குச் சுவையானது இருபதாம் நூற்றாண்டின் முதல் நாளில் முடிவுற்ற அவருடைய வாழ்க்கை.
சி.வை. தாமோதரம் பிள்ளையின் சில பதிப்புரைகளைப் புதியதாகக் கண்டெடுத்தும், அறியப்பட்ட பதிப்புரைகளுக்கு நம்பகமான பாடம் அமைத்தும் மீண்டுமொரு பதிப்புச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் ப. சரவணன்.
ஆ. இரா. வேங்கடாசலபதி
P.Saravanan well known for collecting and editing another Tamil publishing pioneer U.Ve. Saminatha iyer's introductions has made another massive contribution to Tamil with this collection of prefaces written by C.Vai. Thamodharam pillai. A charming read, they put forth the notes to build tamil literary history with the then new found works. Being the first to use terms like The lady of Tamil, his writings help understand the modernisation process of Tamil. P.Saravan has discovered some rare writings, and added notes for the known works making the book invaluable to researches and common readers alike.
ISBN : 9789390224654
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
எனக்குக் கவிதை முகம் (இ-புத்தகம்)
-ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் தி மேலும்













