Your cart is empty.
இல்லாத ஒன்று (இ-புத்தகம்)
-இலக்கியத்தில் பரிசோதனைகளும் மாறுபட்ட வகைமைகளை உருவாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இறுக்கமான கதைக் கட்டுமானங்கள், படிமங்களால் ஆன மொழி, சுருள் அடுக்குகளாக உருப்பெறும் கதையாடல் எனப் பல்வேறு … மேலும்
-இலக்கியத்தில் பரிசோதனைகளும் மாறுபட்ட வகைமைகளை உருவாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இறுக்கமான கதைக் கட்டுமானங்கள், படிமங்களால் ஆன மொழி, சுருள் அடுக்குகளாக உருப்பெறும் கதையாடல் எனப் பல்வேறு பரிசோதனைகள் உலக அளவிலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. இத்தனைக்கும் மத்தியில் எளிய, நேரடியான கதைகூறும் பாணி வழக்கொழிந்துவிடாமல் தன் அழகையும் அற்புதத்தையும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மகத்தான இலக்கிய அனுபவத்தையும் தருகிறது. நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி எளிய கதைகூறல் முறையில் எழுதிய கதைகளில் தேர்ந்தெடுத்த சில இந்தத் தொகுப்பில் உள்ளன. புனைவில் பல்வேறு பரிசோதனைகளைச் செய்திருக்கும் சுந்தர ராமசாமி நேரடியாகக் கூறியிருக்கும் கதைகள் இவை. எளிய வடிவத்திலும் காத்திரமான இலக்கிய அனுபவத்தை வழங்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகளாக இவை திகழ்கின்றன.
ISBN : 9789355232458
PAGES : 0
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
இன்னொருமுறை சந்திக்க வரும்போது (இ-புத்தகம்)
-உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெற மேலும்
இந்திரா காந்தி (இ-புத்தகம்)
-“என் வீட்டின் ஒரே குழந்தை நான். பெரும் தேசிய எழுச்சியின் காரணமாக என் குழந்தைப் பருவம் கொந்தளிப்ப மேலும்













