Your cart is empty.


சேவல்களம்
தமிழர் விளையாட்டுக்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் மிகவும் குறைவு. அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட சேவல்கட்டு விளையாட்டை மையப்படுத்தி நல்ல விவரணைகளுடன் உயிர்ப்பான … மேலும்
தமிழர் விளையாட்டுக்களைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் மிகவும் குறைவு. அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்ட சேவல்கட்டு விளையாட்டை மையப்படுத்தி நல்ல விவரணைகளுடன் உயிர்ப்பான பேச்சுமொழியில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்விளையாட்டு ஒருபுறமும் விளையாட்டுக்கு நிகரான சுவாரசியம் கொண்ட வாழ்க்கை நிகழ்வுகள் ஒருபுறமுமாக இணைகோட்டில் இந்நாவல் செல்கிறது. நாவல் பாத்திரங்கள் பெரும்பான்மையும் ‘நல்லவர்’களாகவும் குணவான்களாகவும் இருப்பது இன்றைய சூழலில் பெருத்த ஆசுவாசத்தைத் தருகிறது.
பாலகுமார் விஜயராமன்
பாலகுமார் விஜயராமன் (பி. 1980) மதுரையைச் சேர்ந்தவர், ஓசூரில் வசித்துவருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்புப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் - தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது சிறுகதைத் தொகுப்பு: ‘புறாக்காரர் வீடு’, சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் ‘அஞ்சல் நிலையம்’, ஆலன் கின்ஸ்பெர்க்கின் ‘ஹௌல் மற்றும் சில கவிதைகள்’, சூழலியல் சார்ந்த ‘கடவுளின் பறவைகள்’ சிறுகதைத் தொகுப்பு ஆகிய மொழியாக்கப் படைப்புகளையும் வெளியிட்டுள்ளார். ‘சேவல்களம்’ இவரது முதல் நாவல். பாலகுமார், தனது ‘தென்திசை’ (thendhisai.blogspot.in) வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகிறார்.
ISBN : 9789388631020
SIZE : 13.9 X 1.0 X 21.5 cm
WEIGHT : 227.0 grams
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
காயாம்பூ
“குழந்தைகள் . . ?” என்னும் கேள்விக்கு “இல்லை” என்று சொல்லி மெல்லியதாகப் புன்னகைக்கும் பெண்கள் பல மேலும்
அத்தைக்கு மரணமில்லை
மூன்று பெண்கள், மூன்று தலைமுறைகள், மூன்று உலகங்களைக் கோர்த்துப் பின்னப்பட்ட கதை இது. பால்யத்தில் மேலும்
சித்தன் சரிதம்
இன்றைய தலைமுறை அறிந்திராத அழகியல் படிமங்களோடு நகரும் ‘சித்தன்சரிதம்’ ஆறுதலை முறையின் கதையை மட்டும மேலும்
வெயில் நீர்
இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ள மேலும்
ஆலவாயன்
‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவா மேலும்
அர்த்தநாரி
‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவா மேலும்
ஆகாயத் தாமரை
ரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ‘ஆகாயத் தாமரை‘யாக விரி மேலும்
புகை நடுவில்
பெண்ணியம் என்ற சொல்லோ கருத்தாக்கமோ தமிழ்ச் சூழலில் பேசப்படாதிருந்த காலப்பகுதியில் பெண்மைய நோக மேலும்
உயிரின் யாத்திரை
அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல், பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும மேலும்
மூன்றாம் சிலுவை
விஜயராகவனுக்கு இரு மனைவியர்; 3 மகள்கள். அவராக வரித்துக் கொண்ட இந்த உறவுகளைக் கடந்து மூன்றாவதாக வ மேலும்
நட்டுமை
காலச்சுவடு அறக்கட்டளையின் ‘சுந்தர ராமசாமி - 75’ கவிதை, இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நா மேலும்
ஆதிரை
காப்பிய ஆதிரை கற்புக்கு இலக்கணமாக விதந்தோதப்பட்டவள். அவள் அமுதசுரபியின் அகன்சுரை நிறைதர இட்ட உணவ மேலும்
கொல்வதெழுதுதல் 90
1990 காலப் பகுதிகளில் இலங்கையின் போர்க்காலப் பகைப்புலத்தில் கிழக்கின் ஒரு முஸ்லிம் கிராமத் தளத்த மேலும்