Your cart is empty.
தீரமிகு புது உலகம்
மொழிபெயர்ப்பாளர்: ஜி. குப்புசாமி |
வகைமைகள்: புதிய வெளியீடுகள் | கிளாசிக் நாவல் |
-
1932ஆம் வருடம் வெளியான ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ உலகின் மகத்தான நாவல்களின் வரிசையில் இடம்பெற்றுவருகிறது.
26ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ள இந்த நாவலை அறிவியல் புனைவு என்று சொல்லலாம்.
நாவல் காட்டும் வாழ்க்கையில் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. உண்மை மாறுகிறது. மகிழ்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. அதிகாரமும் தொழில்நுட்பமும் மக்கள் மனநிலையை நிர்வகிக்கக் கற்றுக்கொள்கின்றன. நம்மைச் சிந்திக்கவைத்துப் பதறவைக்கிறது இப்படைப்பு.
இதில் சொல்லப்படும் ‘சாதிய’ப் படிநிலையமைப்பு இந்த நாவலைத் தற்காலத்துக்கு மிகவும் பொருத்தமானதாக்குகிறது. தமிழில் ஜி. குப்புசாமியின் சரளமான மொழியாக்கத்தில், இப்போது உங்கள் கையில்.
இது வெறும் கற்பனை அல்ல; நம்முடைய எதிர்காலமாகக்கூட இருக்கலாம்.
ISBN : 9789361103346
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 290.0 grams
ரெஜினா சந்திரா
7 Nov 2025
‘தீரமிகு புது உலகம்’ – நூல் அறிமுகம்
இது ஒரு துர்க்கற்பனை வகை நாவல். பொதுவாக அறிவியல் புனைவுகளில் கணிக்கப்படுபவை நிஜமாகவேண்டும் என்ற ஆவல் ஏற்படும். ஆனால், இந்த நூல் தூய்மையும், கண்ணியமும் இல்லாத, அடக்க வேண்டிய இச்சைகள் இல்லாத, நீதி போதனைகள் மனக்கட்டுப்பாட்டு பயிற்சிகள் எதுவும் தேவைப்படாத, ஸோமா மாத்திரையால் தீர்வுகள் வழங்கும் ஒரு சமூகம் குறித்த எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. முடிவு நெஞ்சைப் பதற வைக்கிறது. இருந்தாலும் இந்த நூலில் கணிக்கப்பட்ட சில அவலங்கள் நிறைவேறி வருகின்றன என்பதுதான் கசப்பான உண்மை.
வாழ்வியல் விழிப்புணர்வு பெற அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/photo/?fbid=24049674121375600&set=a.202795896490090














