Your cart is empty.
தொ. பத்தினாதன் ‘போரின் மறுபக்கம்’ தன்வரலாற்று நூலுக்காகவும் அகதிகள் பற்றிய தொடர் கட்டுரைகளுக்காகவும் பரவலாக அறியப்பட்டவர். இது அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.
இவருடைய கதை உலகம் பதற்றமும் வேதனையும் கூடியது. அன்றாடத்தின் சுமைகளைத் தன்னுள் கொண்டு இயங்குவது. தமிழ்நாட்டில் உதிரித் தொழிலாளிகளாகத் திரியும் இலங்கைத் தமிழர்கள், இந்தியாவிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்கள் ஆகியோரின் அன்றாடத்தின் தவிப்புகளை, நிராசைகளைப் பதிவு செய்திருக்கிறார்.
இலங்கைத் தமிழ் அகதி முகாம்களின் வெளியே தெரியாத மற்றொரு முகத்தை இக்கதைகளில் காணலாம்.
ISBN : 9789361106354
SIZE : 14.0 X 2.0 X 21.0 cm
WEIGHT : 165.0 grams
டெனிசியஸ் கனியூட் அரவிந்தறாஜ் (முகநூலிலிருந்து)
13 Jan 2026
இளங்கோ டிசே
21 Apr 2026
தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ சிறுகதைகள்
“அகதி முகாம்களின் 'லைவ் ரிப்போர்ட்’”
…ஈழப் போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்றும் 'அகதி' என்ற அடையாளத்துடனேயே வாழப் பணிக்கப்பட்ட மனிதர்களின் வலியைப் பேசுகிறது தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ சிறுகதைத் தொகுப்பு…
…இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாகப் புலம் பெயர்ந்தவர்களின் 30 ஆண்டுகால வாழ்வியலை, அந்த முகாம்களின் அவலங்களை மிக நெருக்கமாக நின்று பதிவு செய்திருக்கிறார் பத்தினாதன்…
ஈழத் தமிழ் அகதிகளின் வாழ்வைச் சொல்லும் தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ தொகுப்பு குறித்து 'கலைமுகம்' இதழில் வெளியான விரிவான கட்டுரை.
நன்றி: இளங்கோ டிசே
https://www.facebook.com/photo?fbid=26108009375562076&set=pcb.26108011435561870
கிருஷ்ணமூர்த்தி
30 Apr 2026
தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ சிறுகதைகள்
மதிப்புரை
“சொந்த நிலத்தில் போரினால் அடையாளத்தை இழந்தவர்கள், புகலிடத்தில் அதிகாரத்தால் அடையாளத்தை மறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவதை இக்கதைகள் பேசுகின்றன.”
…சிறுகதைகளில் கையாளப்படும் உவமைகளிலும்கூட இந்தக் கையறு நிலையை, அச்சத்தை, அதிகாரத்தின் தோரணையைத் தத்துவமாக மாற்றும் தன்மை சிறப்பாக வெளிப்படுகிறது. ஓரிடத்தில் தாய்ப்பாலுக்காக அழும் குழந்தையிடம் தாயின் அதிகாரம் வெல்கிறது. அவளுடைய அதிகாரத்தால் குழந்தை தாயிடம் வருகிறது என்கிறார். அடுத்த வரியில் குழந்தை வராதபோது தாய்ப்பால் கட்டிவிடுகிறது. அங்கே குழந்தையின் அதிகாரம் வெல்கிறது. தாய் குழந்தையைத் தேடி வருகிறாள். அதிகாரத்தைத் தேடிப் படையெடுக்கும் வாழ்க்கையின் குறுக்குவெட்டு தோற்றமாகவும், அப்படையெடுப்புகளால் அகதிகளாக்கப்படும் மனித வாழ்க்கையின் மீதான பார்வையாகவும் அமைகின்றன இக்கதைகள்…
நன்றி: கிருஷ்ணமூர்த்தி (சீர்மை இணையதளத்திருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://magazine.seermai.com/agathi-vaazhvin-acchangal
இளங்கோ (கலைமுகம்)
21 May 2026
தொ. பத்தினாதனின் ‘நாளையும் நாளையே’ சிறுகதைகள்
மதிப்புரை
…பத்தினாதனின் எழுத்துக்களை இதுவரை வாசிக்காதவர்களாயின் இந்தத் தொகுப்பு பத்தினாதனை வாசிப்பதற்கான நல்லதொரு தொடக்கமாக அமையும். இன்னுமொரு முக்கிய விடயம், ஈழத்தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழகத்தவர்கள், ஒருபோதும் தவறவிடக்கூடாத எழுத்துக்கள் இந்த நூலும், பத்தினாதனுடைய ஏற்கனவே வெளிவந்த ஏனைய தொகுப்புக்களும் எனச் சொல்வேன்…
நன்றி: இளங்கோ (கலைமுகம்)
முழுப்பதிவையும் இணையத்தில் வாசிக்க:
https://www.elankodse.com/post/1779385749092_78935_3236?fbclid=IwY2xjawR-Um1leHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEeO0uMe9jwWkRv-S5CvnH6YQ9MF-018F3X2t4LDeHS4n2SAZkotWKTQgQSZQI_aem_5AC7D9mjNmY1toF0YvcPgg
இளங்கோ டிசே (முகநூலிலிருந்து)
None
பத்தினாதனுடைய 'நாளையும் நாளையே' குறித்த என் வாசிப்பு ஒரு சஞ்சிகையில் வெளிவர இருக்கின்றது. அதில் இருந்து ஒருபகுதி..
"இத்தொகுப்பிலிருக்கும் துயரமும், கொந்தளிப்புமான கதைகளை முன்வைத்து, அண்மையில் வெளிவந்த நூல்களில் கவனிக்கத்தக்க சிறுகதைத் தொகுப்பென்று இதை எளிதாகச் சொல்லிவிட முடியும். மேலும் அகதிகளின் கதைகளை வைத்து அனுதாபமோ கழிவிரக்கவோ வேண்டி நிற்காமல், அதை புனைவின் இயல்பான மொழியில் பத்தினாதன் இதில் சொல்வதைக் கவனித்தாக வேண்டும்.
பத்தினாதனின் எழுத்துக்களை இதுவரை வாசிக்காதவர்களாயின் இந்தத் தொகுப்பு பத்தினாதனை வாசிப்பதற்கான நல்லதொரு தொடக்கமாக அமையும். இன்னுமொரு முக்கிய விடயம், ஈழத்தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழகத்தவர்கள், ஒருபோதும் தவறவிடக்கூடாத எழுத்துக்கள் இந்த நூலும், பத்தினாதனுடைய ஏற்கனவே வெளிவந்த ஏனைய படைப்புக்களும் எனச் சொல்வேன்.
பத்தினாதனின் அகதி முகாம் கதைகளை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை எனில், 'என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்' என்று மாண்டோ சொன்னதை நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்வதே சரியான வழியாக இருக்கும்."
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
அந்தரம் (இ-புத்தகம்)
-அலைவுறுதல். பத்திநாதனின் நாவலை அதன் சாரம் சார்ந்து இந்த ஒற்றைப் புள்ளியில் குவிமையப்படுத்தலாம். மேலும்
நாளையும் நாளையே (இ-புத்தகம்)
தொ. பத்தினாதன் ‘போரின் மறுபக்கம்’ தன்வரலாற்று நூலுக்காகவும் அகதிகள் பற்றிய தொடர் கட்டுரைகளுக்காகவ மேலும்





