Your cart is empty.
பாதையில் பதிந்த அடிகள்
அறிவு துலங்கிய பருவத்தில் மணியம்மா ஒரு பிராமண விதவை. ஆரம்பத்தில் தேச விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கம் சார்ந்தவர்களால் விவசாயக் கூலிகள் சுரண்டப்படுவதைக் கண்டு அறச்சீற்றம் … மேலும்
அறிவு துலங்கிய பருவத்தில் மணியம்மா ஒரு பிராமண விதவை. ஆரம்பத்தில் தேச விடுதலைப் போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கம் சார்ந்தவர்களால் விவசாயக் கூலிகள் சுரண்டப்படுவதைக் கண்டு அறச்சீற்றம் கொண்டார். சனாதன மரபை உடைத்தெறிந்துவிட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். மொட்டையிடுவதைத் தவிர்த்து முடிவளர்த்து கிராப் வைத்துக்கொண்டார். வேட்டியும் ஜிப்பாவும் மேல்துண்டும் அணிந்து தனக்கொரு தனி அடையாளத்தை நிறுவிக் கொண்டார். சைக்கிளில் பயணித்தார். எதிரிகளைச் சமாளிக்க தற்காப்புக் கலைகளைக் கற்றார். இடதுசாரி இயக்கத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தினார். 1953ஆம் ஆண்டு எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகி இறந்துபோன அவர் வரலாற்று நாயகியானார். மணலூர் மணியம்மாவைப் பற்றிக் கள ஆய்வு செய்து இந்த வாழ்க்கை வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். இடதுசாரி இயக்க வரலாற்றில் கவனம் பெறாமல்போன அந்த வீரப் பெண்மணியைப் பற்றிய ஒரே பதிவு என்ற வகையில் இந்தப் படைப்பு முக்கியமானது.
ராஜம் கிருஷ்ணன்
ராஜம் கிருஷ்ணன் (1925 - 2014) முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன், நாற்பது புதினங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள் என்றாலே குடும்பக் கதை எழுதுபவர்கள் என்ற பிம்பத்தை உடைத் தெறிந்தவர். கள ஆய்வு செய்து பல புதினங்களைப் படைத்தவர். குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினர், பெண்கள், குழந்தைகள் இந்த அமைப்பில் சுரண்டப்படுவது குறித்து எழுதியிருக்கிறார். சாகித்திய அக்காதெமி விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, திரு.வி.க. விருது, சரஷ்வதி விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற இவரது படைப்புகள் ஜப்பானிய மொழி உட்படப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எளிய குடும்பத்தில் பிறந்து ஒரு பெண் என்ற வகையில் குடும்ப அமைப்பின் நெருக்கடிகளைச் சமாளித்து அதிலேயே தன் அடையாளத்தை இழந்துபோகாமல் ஒரு இலக்கியவாதியாகத் தன்னை விரிவுபடுத்திக் கொண்டவர் ராஜம் கிருஷ்ணன். சமூக அக்கறையினால் விளைந்த படைப்பூக்கமும் கடுமையான உழைப்பும் இலக்கிய உலகில் இவரது இடத்தை உறுதிசெய்கின்றன.
ISBN : 9789382033417
SIZE : 14.0 X 1.3 X 21.6 cm
WEIGHT : 222.0 grams
By the time Maniyamma attained a certain level of self-awareness, she was a Brahmin widow. However, refusing to conform to social norms of the time, she did not shun public life or shave her hair. Instead, she chose to crop her hair short, like men, and wore clothing typically restricted to men. Initially, she was attracted to the national freedom movement of India, however, later on, she aligned herself with the Leftist movement in India and worked towards the welfare of rural farmers. In 1953, she succumbed to the machination of her enemies. This novel, written by Rajam Krishnan, is the only comprehensive narrative of the life of this remarkable woman.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
-பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்ட மேலும்














