நூலகன் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
24 Feb 2026
ஜார்ஜ் ஜோசப்பின் ‘புளித்த அப்பம்’ குறுநாவல்கள்
மதிப்புரை
…இந்த புத்தகம் வெறும் கதைகளுக்கான புத்தகம் மட்டும் இல்லாமல் நமது வாசிப்பின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும், ஜார்ஜ் ஜோசப் அவர்களின் கதைகள் யாவும் எளிமையாக இருந்தாலும் அதைச் சொல்லும் விதம் தனித்தன்மையாக இருக்கிறது. முக்கியமாக அவரது பெரிய பலம் அவர் கதாபாத்திரங்களைச் சுற்றி இருக்கும் சூழலை வர்ணிப்பதுதான், அதனை வாசித்து உடனே காட்சிப் படுத்த சவாலாக இருந்தாலும் அதை ஒரு கட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் எழுத்துப் புலமை இதுதானே என அறிந்தபின் வாசிக்கையில், கவனம் யாவும் அடுத்து எதை எப்படி வர்ணிக்கப் போகிறார் என்ற ஆர்வம் வந்துவிடும் அது ஒரு போதையாகக்கூட மாறும்.
நன்றி: நூலகன் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.instagram.com/p/DVG2OU-E0Rr/
நிஜந்தன் தோழன் (முகநூலிலிருந்து)
18 Mar 2026
ஜார்ஜ் ஜோசப்பின் ‘புளித்த அப்பம்’ குறுநாவல்கள்
வாசிப்பு அனுபவம்
“வாசிப்பின் வழி ஒரு தரிசனம்”
…'புளித்த அப்பம்' தொகுப்பில் 'பேதலிப்பு' என்ற கதை வாசித்ததும், ஒருவித பொறாமைதான் வந்தது. அப்படி ஒரு கதை சொல்லல். இழவு வீடுகளில் குடி தவிர்க்க இயலாமல், பிரச்சனைகளை கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறது…
…ஆனால் அதை சொல்லும் முறையில் தான், இந்த குறுநாவல் தனித்துவமானதாக நிற்கிறது.
பேதலிப்பு எல்லா நபர்களுக்கும் இருக்கிறது, கூட, குறையத்தான் ஒவ்வொருவிடத்திலும் மாறுகிறது. ஒரு இறப்பு நிகழ்ந்த வீட்டில் அதை காட்சிப்படுத்தியிருக்கிறார் ஜார்ஜ்.
நன்றி: நிஜந்தன் தோழன் (முகநூலிலிருந்து)