-கடலோடும் அலைகளோடும் கடல்வாழ் மீன்களோடும் உள்ள உறவும் போராட்டமும்தான் ‘வாங்கல்’ நாவலாய் விரிந்திருக்கின்றன. ஏதாவதொரு நாளில் யாராவது ஒரு மனிதனைக் கடல் உள்வாங்குகிறது. அந்தக் கொடுமையைப் பார்த்தபடியே …
மேலும்
-கடலோடும் அலைகளோடும் கடல்வாழ் மீன்களோடும் உள்ள உறவும் போராட்டமும்தான் ‘வாங்கல்’ நாவலாய் விரிந்திருக்கின்றன. ஏதாவதொரு நாளில் யாராவது ஒரு மனிதனைக் கடல் உள்வாங்குகிறது. அந்தக் கொடுமையைப் பார்த்தபடியே அடுத்த நாள் வாழ்க்கையை அதே கடலோடு தொடர்கிறார்கள் இந்த எளிய மக்கள்.
ஒரு பகுதி மக்களின் வாழ்வு அப்பகுதி மக்களோடு முடியாமல், அடுத்த பகுதி மக்களையும் தன்னோடு சேர்த்துக்கொள்கிறது. தென் மாவட்டக் கடற்கரையோர மீனவர்களின் வாழ்க்கையை மாறுபட்ட கோணத்தில் பேசுகிறது இப்படைப்பு. இந்நாவலில் நாம் பார்க்கிற காட்சிகள் எளிய மக்களின் வயிற்றுப்பாட்டை உணர்த்துகின்றன. இந்த வாழ்க்கைச் சவால்தான் ‘வாங்கல்’.