Your cart is empty.


வாராணசி
வாராணசியென்னும் புறவெளி, காலாதீதமாக உயிர்த்துறப்பிற்கான நிலம். பெண்ணுடல் மரணத்தின் நிலமாக உருவகிக்கப்படும்போது வாராணசியைக் கட்டமைக்கும் அகவெளியின் கதையாகிறது. இரு பெண்கள், இருவேறு காலங்கள், அவர்களின் உணர்வின் காலத்தில் … மேலும்
வாராணசியென்னும் புறவெளி, காலாதீதமாக உயிர்த்துறப்பிற்கான நிலம். பெண்ணுடல் மரணத்தின் நிலமாக உருவகிக்கப்படும்போது வாராணசியைக் கட்டமைக்கும் அகவெளியின் கதையாகிறது. இரு பெண்கள், இருவேறு காலங்கள், அவர்களின் உணர்வின் காலத்தில் நிகழ்வுகள் மீள மீளச் சுழல்கின்றன. பார்க்கும் காலம் அவற்றை முன்னதிலிருந்து வேறொன்றாக அர்த்தப்படுத்துகிறது. நிகழ்வுகளைத் தொன்மத்துடன் அடையாளப்படுத்துவதன் மறுதலையாக இன்றைத் தொன்மைத்தன்மை கொண்டதாக மாற்ற முயற்சிக்கிறது இந்நாவல்.
பா. வெங்கடேசன்
பா. வெங்கடேசன் எண்பதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கியவர்; மதுரையில் பிறந்து கல்லூரிக் காலம்வரை அங்கேயே வளர்ந்தவர். மனைவி, இரண்டு மகன்களுடன் பணி நிமித்தமாக இப்போது ஒசூர்வாசி. வாகனங்களுக்கான பிளாஸ்டிக் உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் பிரபல தனியார் தொழில் நிறுவனத்தின் நிதிப் பிரிவில் மேலாளர். கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், சிறு புதினங்கள், புதினங்கள் படைப்பாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை பதிப்பிக்கப்பட்டவையும் படாதவையும் படவிருப்பவையுமாக நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவருடைய பங்களிப்புகள். புனைவிலக்கியத்தில் சீரிய பங்களிப்பிற்காக ‘ஸ்பாரோ’, ‘தமிழ் திரு’, ‘விளக்கு’ ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
ISBN : 9789388631136
SIZE : 13.7 X 0.9 X 21.3 cm
WEIGHT : 216.0 grams
Vaaranasi is a new novel by the critically acclaimed writer Ba.Venkatesan. Written in his unique, complex language, this novel writes the present into a mythical status. Varanasi, the city, is considered to be land of death for a long time. Varanasi the novel builds upon the theme of women body as a space of death. Writing about two women from two different times, emotions, events are weaved together with myths in this novel.<\p>
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
ராணி வேலு நாச்சியார் - சிவகங்கையின் சாகச அரசி
-பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை
நவாப்கள் தங்கள் கட்ட மேலும்