Your cart is empty.
ஏறுவெயில்
நகரமயமாதலின் விளைவாகத் தன்னுடைய பூர்விக நிலத்தை விட்டுச் செல்லும் ஒரு கிராமத்துக் குடும்பத்தின் கதைதான் ‘ஏறுவெயில்'. இந்த இடப்பெயர்வினூடே நடக்கும் பொருளாதார, சமூக, உறவுச் சிக்கல்களை இந்த நாவல் தீவிரமாகக் கையாள்கிறது.
வெயில் தகிக்கும் பிரதேசத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் ஒரு படைப்பாளி வெயில் தரும் உணர்வுடன் வாழ்க்கையை அணுகிப் பார்த்ததன் வெளிப்பாடு இந்த நாவல். இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்குவதற்கான உந்துதலாக அமைந்த நாவல் இது என்று பெருமாள்முருகன் குறிப்பிடுகிறார்.
இது இவருடைய முதல் நாவல். 1991இல் எழுதிய இந்த நாவல் வாசகர்களிடத்தின் தன் புதுமையையும் உயிர்ப்பையும் இன்றளவிலும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
ISBN : 9788189945411
SIZE : 13.8 X 1.0 X 21.5 cm
WEIGHT : 247.0 grams
வினோபா ஸ்டெர்லின்
16 Feb 2026
பெருமாள்முருகனின் ‘ஏறுவெயில்’
வாசகர் பார்வை
”நகரமயமாக்கத்தின் பின் விளைவுகளைப் பேசும் நாவல்”
நன்றி: வினோபா ஸ்டெர்லின் (இன்ஸ்டாக்ராமிலிருந்து)
முழுப்பதிவையும் பார்க்க:
https://www.instagram.com/p/DU4RK-pjP2t/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ%3D%3D
A novel on the urbanisation process and its impact on family and relationships.














