Your cart is empty.
ஜான் மெக்காஹர்ன்
பிறப்பு: 1934-2006
1934இல் டப்ளினில் பிறந்தார். முழுநேர எழுத்தாளராவதற்கு முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றவர். கற்பித்தல் பணியுடன் நீண்ட பயணங்களையும் மேற்கொண்டார். மைக்கேல் லாங்லி, ஷீமஸ் ஹீனி போன்ற புகழ்பெற்ற அயர்லாந்து எழுத்தாளர்களது தலைமுறையைச் சார்ந்தவர்; அவர்களுக்கு இணையான எழுத்தாற்றல் பெற்றவர். மிகவும் பாராட்டப்பட்ட ஆறு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஆண்டுதோறும் அயர்லாந்து எழுத்தாளர் ஒருவரது சிறந்த புனைவு நூலுக்கு மெக்காஹர்ன் பெயரில் விருது வழங்கப்படுகிறது.
‘பெண்கள் நடுவே’ நாவல் ‘ஐரிஷ் டைம்ஸ்’ விருதை வென்றது. புக்கர் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றது. இந்த நாவலை நான்கு பாகங்கள் கொண்ட தொலைக்காட்சித் தொடராக பிபிசி தயாரித்திருக்கிறது.