Your cart is empty.

எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார்
பிறப்பு: 1871-1946
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்சான்ற வரலாற்று வல்லுநர்களில் கிருஷ்ணசுவாமி ஐயங்கார் குறிப்பிடத்தக்கவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1899ஆம் ஆண்டு வரலாற்றுத் துறையில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
1899ஆம் ஆண்டிலிருந்து 1909ஆம் ஆண்டுவரை பெங்களூர் மத்தியக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1904ஆம் ஆண்டு ராயல் ஆசியாட்டிக் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
இந்திய வரலாற்றுத் துறை ஆராய்ச்சிகளில் அவர் ஆற்றிய அரும் பணிகளைப் பாராட்டி, அரசாங்கம் அவருக்கு 1928இல் ராவ் பகதூர் பட்டம் வழங்கிப் பெருமை சேர்த்தது.