Your cart is empty.

பாலகுமார் விஜயராமன்
பிறப்பு: 1980
பாலகுமார் விஜயராமன் (பி. 1980) மதுரையைச் சேர்ந்தவர், ஓசூரில் வசித்துவருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்புப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் - தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது சிறுகதைத் தொகுப்பு: ‘புறாக்காரர் வீடு’, சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் ‘அஞ்சல் நிலையம்’, ஆலன் கின்ஸ்பெர்க்கின் ‘ஹௌல் மற்றும் சில கவிதைகள்’, சூழலியல் சார்ந்த ‘கடவுளின் பறவைகள்’ சிறுகதைத் தொகுப்பு ஆகிய மொழியாக்கப் படைப்புகளையும் வெளியிட்டுள்ளார். ‘சேவல்களம்’ இவரது முதல் நாவல். பாலகுமார், தனது ‘தென்திசை’ (thendhisai.blogspot.in) வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகிறார்.