Your cart is empty.
2 Oct 2025
சீர்ஷேந்து முகோபாத்யாயின் ’அத்தைக்கு மரணமில்லை’ – குறுநாவல் மதிப்புரை …இக்குறுநாவல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை பெண்களின் கதையையும் காலத்தின் போக்கில் மாற்றமடையும் அவர்களின் - குடும்பத்தின் - நிலையையும் எடுத்துப் பேசுகிறது. மேலும், ஒவ்வொரு தலைமுறையைச் சேர்ந்த பெண்களின் மனங்களில் நிகழ்ந்திருக்கும் வேறுபாட்டையும் மாற்றத்தையும் அவர்களுக்குள் நிறைந்திருக்கும் ஆசைகள், நிராசைகள், ஏக்கங்கள், கனவுகள், வேட்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் வழியாக எடுத்துரைக்கிறது… ..நூறு பக்கங்களுக்குள்ளாக, மூன்று தலைமுறை பெண்களின் மனங்களையும் வாழ்க்கையையும் மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கும் இக்குறுநாவலை ஒரே அமர்வில் வாசித்து முடிக்கும் வகையில், மிக உயிரோட்டமாக எழுதியிருக்கிறார் சீர்ஷேந்து. அதை மிகச் சீரான நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் தி. அ. ஸ்ரீனிவாஸன்…
நன்றி:வினோத் ராஜ் (முகநூல் பதிவிலிருந்து) முழுப்பதிவுக்கு:
https://www.facebook.com/photo/?fbid=122179719914534986&set=a.122112241058534986